» சினிமா » செய்திகள்

நடிகை கங்கனா ரணாவத் மீதான வழக்கை ரத்து செய்ய மும்பை உயர்நீதிமன்றம் மறுப்பு

வியாழன் 9, செப்டம்பர் 2021 4:18:30 PM (IST)

இந்தி பாடலாசிரியர் ஜாவித் அக்தர் தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்ய கோரி, நடிகை கங்கனா ரணாவத் தாக்கல் செய்த மனுவை மும்பை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
 
பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மறைவை அடுத்து நடிகை கங்கனா ரணாவத், பாலிவுட்  பிரபலங்கள் மீது பல பரபரப்பு புகார்களை கூறியிருந்தார். வாரிசு நடிகர், நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது, போதைப் பொருள் பயன்பாடு உள்பட பல  தகவல்களை கூறியிருந்தார். அதோடு கரண் ஜோகர் உள்பட முன்னணி டைரக்டர்கள் மீது புகார்களை தெரிவித்திருந்தார்.

பிரபல இந்தி திரைப்பட பாடலாசிரியா் ஜாவித் அக்தர் குறித்தும் பேட்டி ஒன்றில், அவர் அவதூறு கருத்தை கூறியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து கங்கனா மீது அந்தேரி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஜாவித் அக்தர் மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்ந்து ரணாவத் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரித்த நீதிமன்றம் கங்கனாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory