» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: இந்திய அணி கேப்டனாக ஷிகர் தவான் நியமனம்!

திங்கள் 3, அக்டோபர் 2022 12:28:24 PM (IST)

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ஷிகர் தவான் நியமிக்கப்பட்டுள்ளார்.

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. இதில் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தற்போது நடந்து வருகிறது. இதனை தொடர்ந்து ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது.இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டனாக ஷிகர் தவான் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணி: ஷிகர் தவான் (கேப்டன்), ஷ்ரேயாஸ் ஐயர், ருதுராஜ் கெய்க்வாட், கில், ரஜத் படிதார், ராகுல் திரிபாதி, இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், ஷாபாஸ் அகமது, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், ரவி பிஷ்னோய், முகேஷ் குமார், அவேஷ் கான், முகமட் சிராஜ், தீபக் சாஹர்.

டி20 உலக கோப்பை இந்த மாதம் தொடங்க உள்ளதால் அந்த அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர் முடிவடைந்த உடன் ஆஸ்திரேலியா செல்ல இருப்பதால் ஒருநாள் தொடரில் அவர்கள் இடம் பெறவில்லை.

முதல் ஒருநாள் போட்டி அக்டோபர் 6ஆம் தேதியும், மீதமுள்ள இரண்டு ஒருநாள் போட்டிகள் அக்டோபர் 9 மற்றும் 11ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.முகேஷ் குமார் மற்றும் ரஜத் படிதார் ஆகியோர் இந்திய அணிக்கு அறிமுகமாக தேர்வு பெற்றுள்ளனர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory