» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
இந்தியாவை பாகிஸ்தான் மீண்டும் வீழ்த்தும்: சர்ப்ராஸ் அகமது பேட்டி
சனி 20, ஆகஸ்ட் 2022 5:22:07 PM (IST)
துபாய் ஆடுகளங்கள் எங்களுக்கு கூடுதல் பலம், இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தும் என்று மாஜி கேப்டன் சர்ப்ராஸ் அகமது கூறியுள்ளார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவுடன் மோதும் போட்டி குறித்து பாகிஸ்தான் மாஜி கேப்டன் சர்ப்ராஸ் அகமது அளித்துள்ள பேட்டி: ஆசிய கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிராக நாங்கள் முதல் போட்டியை விளையாட உள்ளோம். இந்த போட்டி நிச்சயம் கடும் சவால் நிறைந்ததாக இருக்கும், கடைசியாக நாங்கள் இந்திய அணியை இதே இடத்தில் தான் எதிர்கொண்டு வெற்றியும் பெற்றுள்ளோம்.
தொடர் நடைபெறும் துபாய் ஆடுகளங்கள் இந்திய வீரர்களை விட எங்களுக்கே அதிக பரீட்சயமானது. அவர்கள் துபாயில் ஐபிஎல் தொடர்களில் விளையாடியிருந்தாலும் அவர்களால் ஆடுகளங்களை பெரிதாக புரிந்து கொண்டிருக்க முடியும் என எனக்கு தோன்றவில்லை. நாங்கள் துபாய் ஆடுகளங்களில் மிக அதிகமான போட்டிகளில் விளையாடியுள்ளது எங்களுக்கு கூடுதல் பலத்தை கொடுக்கும், என்றார்.