» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

இந்தியாவை பாகிஸ்தான் மீண்டும் வீழ்த்தும்: சர்ப்ராஸ் அகமது பேட்டி

சனி 20, ஆகஸ்ட் 2022 5:22:07 PM (IST)

துபாய் ஆடுகளங்கள் எங்களுக்கு கூடுதல் பலம், இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தும் என்று மாஜி கேப்டன் சர்ப்ராஸ் அகமது கூறியுள்ளார். 

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவுடன் மோதும் போட்டி குறித்து பாகிஸ்தான் மாஜி கேப்டன் சர்ப்ராஸ் அகமது அளித்துள்ள பேட்டி: ஆசிய கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிராக நாங்கள் முதல் போட்டியை விளையாட உள்ளோம். இந்த போட்டி நிச்சயம் கடும் சவால் நிறைந்ததாக இருக்கும், கடைசியாக நாங்கள் இந்திய அணியை இதே இடத்தில் தான் எதிர்கொண்டு வெற்றியும் பெற்றுள்ளோம்.

தொடர் நடைபெறும் துபாய் ஆடுகளங்கள் இந்திய வீரர்களை விட எங்களுக்கே அதிக பரீட்சயமானது. அவர்கள் துபாயில் ஐபிஎல் தொடர்களில் விளையாடியிருந்தாலும் அவர்களால் ஆடுகளங்களை பெரிதாக புரிந்து கொண்டிருக்க முடியும் என எனக்கு தோன்றவில்லை. நாங்கள் துபாய் ஆடுகளங்களில் மிக அதிகமான போட்டிகளில் விளையாடியுள்ளது எங்களுக்கு கூடுதல் பலத்தை கொடுக்கும், என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory