» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி: 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!

வெள்ளி 19, ஆகஸ்ட் 2022 10:38:17 AM (IST)



ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் ஷிகர் தவான் மற்றும் ஷுப்மன் கில் அதிரடியால் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

ஹராரேவில் நடைபெற்ற முதல் ஒருநாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் கே.எல். ராகுல், ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் ஷுப்மன் கில், இஷான் கிஷன், சிராஜ் போன்றோர் இடம் பெற்றனர். இந்திய அணிக்காகக் கடந்த பிப்ரவரி மாதம் கடைசியாக விளையாடிய தீபக் சஹார், காயத்திலிருந்து மீண்டு வந்து இந்திய அணியில் இடம் பெற்றார்.

ஜிம்பாப்வே அணி ஆரம்பம் முதல் இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள சிரமப்பட்டது. முதல் நான்கு பேட்டர் ஒற்றை இலக்க ரன்களுக்கு ஆட்டமிழந்தார்கள். இதனால் 101. ஓவர்களில் 31 ரன்களுக்கு முதல் 4 விக்கெட்டுகளை இழந்தது. தீபக் சஹார் சிறப்பாகப் பந்துவீசி முதல் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.  ஜிம்பாப்வே அணி 25 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 95 ரன்கள் எடுத்து தடுமாறியது. 

பின்வரிசை வீரர்கள் இருவர் அதிக ரன்கள் எடுத்து ஜிம்பாப்வேவுக்கு ஓரளவு நல்ல ஸ்கோரைப் பெற்றுத் தந்தார்கள். பிராட் எவான்ஸ் - ரிச்சர்ட் 9-வது விக்கெட்டுக்கு 70 ரன்கள் சேர்த்து அசத்தினார்கள். இறுதியில் ஜிம்பாப்வே அணி 40.3 ஓவர்களில் 189 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பிராட் எவான்ஸ் 33 ரன்கள் எடுத்துக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கேப்டன் ரெஜிஸ் 35, ரிச்சர்ட் 34 ரன்கள் எடுத்தார்கள். இந்தியப் பந்துவீச்சாளர்களில் தீபக் சஹார், பிரசித் கிருஷ்ணா, அக்‌ஷர் படேல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். 

இதனையடுத்து, 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கியது இந்திய அணி. தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான் மற்றும் ஷுப்மன் கில் களமிறங்கினர். இந்த ஜோடி தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடியது. இவர்கள் இருவரின் பார்ட்னர்ஷிப்பை உடைக்க ஜிம்பாப்வே வீரர்கள் எடுத்த அனைத்து முயற்சிகளும் பலனிளிக்கவில்லை. 

சிறப்பாக விளையாடிய இருவரும் அரை சதம் அடித்து அசத்தினர். இதன் மூலம் இந்திய அணி 30.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி வெற்றி பெற்றது. ஷுப்மன் கில் 72 பந்துகளில் 82 ரன்களும், ஷிகர் தவான் 113 பந்துகளில் 81 ரன்களும் குவித்து களத்தில் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory