» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ரஞ்சி கோப்பை: முதல்முறையாக விதர்பா அணி சாம்பியன்

திங்கள் 27, ஜூன் 2022 10:47:58 AM (IST)



ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட்டில் விதர்பா அணி முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. 

ரஞ்சிக்கோப்பையில் டெல்லி அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் விதர்பா அணி அபார வெற்றி பெற்றது. இந்தூரில் நடைபெற்ற இப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் டெல்லி அணி 295 ரன்களும், விதர்பா அணி 547 ரன்களும் எடுத்தன. டெல்லி அணி இரண்டாவது இன்னிங்ஸில் 280 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

அதிகபட்சமாக நிதிஷ் ரானா 64 ரன்கள் எடுத்தார். 29 ரன்கள் என்ற வெற்றி இலக்கை, விதர்பா அணி ஒரு விக்கெட்டை மட்டும் இழந்த நிலையில் எட்டியது. இந்த வெற்றியை அந்த அணியின் வீரர்கள், நிர்வாகிகள் கொண்டாடி மகிழ்ந்தனர். ரஞ்சிக்கோப்பையை விதர்பா அணி வெல்வது இதுவே முதல்முறையாகும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory