» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஜூன் 23ல் தொடக்கம்

வெள்ளி 29, ஏப்ரல் 2022 12:40:56 PM (IST)

டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஜூன் 23ம் தேதி தொடங்குகிறது. நெல்லை, கோவை உட்பட 4 மைதானங்களில் போட்டி நடைபெறும். 

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் டி.என்.பி.எல் (தமிழ்நாடு பிரீமியர் லீக்) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2016-ம் ஆண்டு முதல் நடைபெறுகிறது. அவ்வகையில் 6-வது டி.என்.பி.எல். போட்டியை வரும் ஜூன் இறுதி முதல் ஜூலை இறுதி வரை நடத்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் திட்டமிட்டு உள்ளது.

இந்நிலையில் 6வது டிஎன்பிஎல் போட்டிக்கான அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. போட்டி ஜூன் 23ம் தேதி தொடங்குகிறது. நெல்லை, நத்தம், கோவை, சேலம் ஆகிய மைதானங்களில் போட்டி நடைபெறும். 

28 லீக் ஆட்டங்கள், பிளேஆப் போட்டிகள் மற்றும் இறுதிப்போட்டி என மொத்தம் 32 ஆட்டங்கள் நடக்கின்றன. பிளேஆப் போட்டிகள் சேலம் மற்றும் கோவையில் நடக்கின்றன. ஜூலை 30ம் தேதி கோவையில் இறுதிப்போட்டி நடத்தப்படுகிறது. நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் துவக்க ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணியுடன் மோத உள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory