» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

தோனியை விட பெரிய தொகைக்கு ஜடேஜாவை தக்க வைத்த சிஎஸ்கே!

புதன் 1, டிசம்பர் 2021 3:35:54 PM (IST)



ஐ.பி.எல். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி  ஜடேஜாவை 16 கோடிக்கும், தோனியை 12 கோடிக்கும் தக்கவைத்துள்ளது. 

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் தற்போது 8 அணிகள் விளையாடி வருகின்றன. அடுத்த ஆண்டு கூடுதலாக இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால் வீரர்கள் முதலில் இருந்து ஏலம் விடப்பட இருக்கிறார்கள். ஏற்கனவே உள்ள 8 அணிகள் தலா நான்கு வீரர்களை தக்கவைத்துக் கொள்ள முடியும். அந்த வகையில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோனி, ஜடேஜா, ருதுராஜ், மொயீன் அலி ஆகியோரை தக்கவைத்துள்ளது.

இதில் ஜடேஜாவை 16 கோடி ரூபாய் கொடுத்தும், டோனியை 12 கோடி ரூபாய் கொடுத்தும், மொயீன் அலியை 8 கோடி ரூபாய் கொடுத்தும், ருதுராஜன் கெய்க்வாட்டை 6 கோடி ரூபாய் கொடுத்தும் தக்கவைத்துள்ளது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேன் வில்லியம்சன் (14 கோடி ரூபாய்), அப்துல் சமாத் (4 கோடி ரூபாய்), உம்ரான் மாலிக் (4 கோடி ரூபாய்) ஆகியோரை தக்கவதை்துள்ளது.

பஞ்சாப் கிங்ஸ் அணி மயங்க் அகர்வாலை 12 கோடி ரூபாய் கொடுத்தும், அர்ஷ்தீப் சிங்கை 4 கோடி ரூபாய் கொடுத்தும் தக்கவைத்துள்ளது. டெல்லி கேப்பிடல்ஸ் அணி ரிஷாப் பண்ட்-ஐ 16 கோடி ரூபாய் கொடுத்தும், அக்சார் பட்டேலை 9 கோடி ரூபாய் கொடுத்தும், பிரித்வி ஷாவை 7.5 கோடி ரூபாய் கொடுத்தும், அன்ரிச் நோர்ஜோவை 6.5 கோடி ரூபாய் கொடுத்தும் தக்கவைத்துள்ளது. கொல்கத்தா அணியில் சக்ரவர்த்தி (8 கோடி ரூபாய்), ரஸல் (12 கோடி ரூபாய்), வெங்கடேஷ் அய்யர் (8 கோடி ரூபாய்), சுனில் நரைன் (6 கோடி ரூபாய்) ஆகியோர் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory