» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
தூத்துக்குடியில் கூடைப்பந்து போட்டி: கிரஸண்ட் பள்ளி வெற்றி
வியாழன் 11, நவம்பர் 2021 4:00:08 PM (IST)
தூத்துக்குடியில் கூடைப்பந்து போட்டியில் கிரஸண்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி கோப்பையை வென்றது.
தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கில் கமல் நினைவு கூடைப்பந்து போட்டி நவம்பர் 5 தேதி முதல் 7 தேதி வரை நடைபெற்றது. இப்போட்டியில் 13 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் தூத்துக்குடி கிரஸண்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அரையிறுதிப் போட்டியில் விகாசாபள்ளியை 42: 23 என்ற புள்ளிகள் கணக்கில் வென்றனர்.
மேலும் இறுதி சுற்றில் புனித தாமஸ் பள்ளிவை 57 :53 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை வென்றனர். தொடர்ந்து 2வது முறையாக கோப்பையை வென்ற கிரஸண்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்களையும், பயிற்சி அளித்த ஆசிரியர் பிரதீப் குமாரையும் பள்ளியின் தாளாளர் ஹைதர் அலி, முதல்வர் சையத் அலி ஆகியோர் பாராட்டினர்.