» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஆகஸ்ட் 7, தேசிய ஈட்டி எறிதல் தினமாக அறிவிப்பு: நீரஜ் சோப்ராவுக்கு தடகள சம்மேளனம் கெளரவம்!

புதன் 11, ஆகஸ்ட் 2021 3:24:06 PM (IST)



நீரஜ் சோப்ராவைக் கெளரவப்படுத்தும் விதமாக ஆகஸ்ட் 7-ம் தேதியை தேசிய ஈட்டி எறிதல் தினமாகக்  இந்தியத் தடகள சம்மேளனம் அறிவித்துள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தடகள பிரிவில் இந்திய ஈட்டி எறிதல் வீரா் நீரஜ் சோப்ரா (23) தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்தாா். இறுதிச்சுற்றில் அவா் 87.58 மீட்டா் தூரம் எறிந்து முதலிடம் பிடித்தாா்.  கடந்த 1920 ஆன்ட்வொ்ப் ஒலிம்பிக் போட்டியில் தொடங்கி, 101 ஆண்டுகளாக அந்த விளையாட்டுத் திருவிழாவில் களம் கண்டு வரும் இந்தியாவுக்கு தடகளத்தில் கிடைத்துள்ள முதல் மகுடம் இது. முன்னதாக ஒலிம்பிக் தடகளத்தில் ஓட்டப் பந்தயத்தில் மில்கா சிங் (1960 ரோம்), பி.டி.உஷா (1984 லாஸ் ஏஞ்சலீஸ்) போராடி தவற விட்ட பதக்க வாய்ப்புகளை, தற்போது நீரஜ் சோப்ரா தட்டிச் சென்றுள்ளாா்.

இந்நிலையில் ஆகஸ்ட் 7 அன்று ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா. இதையொட்டி ஆகஸ்ட் 7-ம் தேதியை தேசிய ஈட்டி எறிதல் நாளாக தேதி கொண்டாடப்படும் என இந்தியத் தடகள சம்மேளனம் அறிவித்துள்ளது. இதற்குப் பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளார்கள். அடுத்த வருடம் முதல் ஒவ்வொரு மாநிலத்திலும் ஈட்டி எறிதல் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. அதற்கடுத்த வருடம் நாட்டிலுள்ள 600-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் ஈட்டி எறிதல் போட்டிகள் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு நீரஜ் சோப்ராவும் நன்றி தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory