» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

இரட்டைக் குழந்தைகளுக்குத் தந்தையானார் உசைன் போல்ட்!

செவ்வாய் 22, ஜூன் 2021 4:26:30 PM (IST)



மின்னல் வேக மனிதர் என்று புகழப்படும் ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட், இரட்டைக் குழந்தைகளுக்குத் தந்தையாகியுள்ளார்.

ஜமைக்காவைச் சேர்ந்த பிரபல ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட், 100 மீ. ஓட்டத்தை 9.58 விநாடிகளில் ஓடி உலக சாதனை செய்தவர். 100 மீ. ஓட்டம், 200 மீ. ஓட்டம், 4x100 தொடர் ஓட்டம் ஆகியவற்றில் உலக சாதனை படைத்து தன்னிகரற்ற தடகள வீரராக உள்ளார். ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் 8 முறை தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். 

2008, 2012, 2016 என மூன்று ஒலிம்பிக்ஸ் போட்டிகளிலும் 100 மீ. ஓட்டம், 200 மீ. ஓட்டம் ஆகிய இரண்டிலும் தங்கப் பதக்கங்களை வென்று அரிய சாதனையையும் படைத்தவர். 2017 உலக சாம்பியன்ஷிப் போட்டிக்குப் பிறகு ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார். உசைன் போல்ட்டின் காதலி காசி பென்னட்டுக்குக் கடந்த வருடம் மே மாதம் பெண் குழந்தை பிறந்தது. 

உசைன் போல்ட் - காசி பென்னட் ஆகிய இருவரும் 2014 முதல் காதலித்து வருகிறார்கள். ஒலிம்பியா லைட்னிங் போல்ட் எனப் பெண் குழந்தைக்குப் பெயரிட்டார் உசைன் போல்ட். இந்நிலையில் தற்போது இரட்டை ஆண் குழந்தைகளுக்குத் தந்தையாகியுள்ளார் போல்ட். இம்முறையும் குழந்தைகளுக்கு - தண்டர் போல்ட், செயிண்ட் லியோ என வித்தியாசமான முறையில் பெயரிட்டுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory