» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
அஸ்வின் அபாரம்: 134 ரன்களுக்கு ஆட்டமிழந்த இங்கிலாந்து
ஞாயிறு 14, பிப்ரவரி 2021 5:20:58 PM (IST)

சென்னையில் நடைபெறும் 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் அஸ்வின் அபார பந்துவீச்சால் இங்கிலாந்து அணி 134 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
சென்னை டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 59.5 ஓவர்களுக்கு 134 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் சென்னை சேப்பாக்கம் திடலில் நேற்று (பிப்.13) தொடங்கியது. முதலில் ஆடிய இந்திய அணி 329 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. ரோகித் சர்மா 161 ரன்களும், ரஹானே 67 ரன்களும், ரிஷப் பந்ட் ஆட்டமிழக்காமல் 58 ரன்களும் எடுத்தனர். மொயின் அலி 4 விக்கெட் வீழ்த்தினார்.பின்னர் இங்கிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. இந்திய அணியினரின் அபார பந்து வீச்சால் இங்கிலாந்து தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
அஸ்வின் அபாரமாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஸ்டோக்ஸ், ஃபோக்ஸ் மட்டுமே தாக்குப்பிடித்து ஆடிய நிலையில், அவர்களுக்கு பிறகு களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களிலேயே வெளியேறினர்.இந்திய அணிகள் சார்பில் அஸ்வின் 5, இஷாந்த் சர்மா, அக்ஸார் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனைத் தொடர்ந்து இந்திய அணி 195 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தாெடங்கியது. இன்றைய ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 54ரன்கள் எடுத்துள்ளது இந்திய அணி.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மார்ச் மாதத்தின் சிறந்த வீரராக புவனேஸ்வர் குமார் தேர்வு!
செவ்வாய் 13, ஏப்ரல் 2021 5:12:49 PM (IST)

ஐ.பி.எல். போட்டிகளில் 350 சிக்சர்கள்: கிறிஸ் கெய்ல் புதிய சாதனை!!
செவ்வாய் 13, ஏப்ரல் 2021 11:48:19 AM (IST)

சஞ்சு சாம்சன் போராட்டம் வீண் தான் : கடைசிப்பந்தில் பஞ்சாப் த்ரில் வெற்றி
செவ்வாய் 13, ஏப்ரல் 2021 10:45:27 AM (IST)

ஃபினிஷிங் முக்கியம்: மணிஷ் பாண்டேவுக்கு வீரேந்திர சேவாக் அட்வைஸ்
திங்கள் 12, ஏப்ரல் 2021 3:43:41 PM (IST)

டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை தோல்வி ஏன்? கேப்டன் தோனி விளக்கம்
திங்கள் 12, ஏப்ரல் 2021 12:41:50 PM (IST)

சென்னையில் ஐபிஎல் 2021 தொடங்கியது: மும்பையை வீழ்த்தியது பெங்களூரு!!
சனி 10, ஏப்ரல் 2021 10:11:53 AM (IST)
