» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு: 2,632 பேர் எழுதினர்; 404 பேர் வரவில்லை!
ஞாயிறு 16, நவம்பர் 2025 11:32:55 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 10 மையங்களில் நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வை 2,632 பேர் எழுதினர். 404 பேர் தேர்வு எழுத வரவில்லை.
தமிழகம் முழுவதும் ஆசிரியர் தகுதித்தேர்வு நேற்று தொடங்கியது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) 2-ம் தாள் தேர்வு நடக்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று நடந்த முதல் தாள் ஆசிரியர் தகுதி தேர்வு தூத்துக்குடி, கோவில்பட்டி, விளாத்திகுளம், திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் 10 மையங்களில் நடந்தது. இந்த தேர்விற்கு மாவட்டம் முழுவதும் இருந்து 3 ஆயிரத்து 36 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
இதில் நேற்று நடந்த தேர்வில் மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்து 632 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். 404 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வை முன்னிட்டு தேர்வு நடந்த மையங்களுக்கு துப்பாக்கி ஏந்திய பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
தூத்துக்குடியில் தேர்வு நடந்த விகாசா பள்ளி மையத்தை ஆட்சியர் இளம்பகவத் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான 2-ம்தாள் தேர்வு இன்று நடக்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 29 மையங்களில் நடைபெறும் இத்தேர்வில் கலந்து கொள்ள 9 ஆயிரத்து 150 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகத்தைக் காக்கவே நாம் வந்துள்ளோம் : சுதந்திர தின விழாவில் முதல்வர் விஜய் உரை!
சனி 15, ஆகஸ்ட் 2026 10:16:55 AM (IST)

போலீசாரைத் துப்பாக்கி காட்டி மிரட்டிய ரவுடி அதிரடி கைது: நெல்லை அருகே பரபரப்பு!
சனி 15, ஆகஸ்ட் 2026 9:02:50 AM (IST)

திருநங்கையைக் கத்தியால் குத்தி செல்போன் பறித்த 2 சிறுவர்கள் கைது: தூத்துக்குடி அருகே பரபரப்பு!
சனி 15, ஆகஸ்ட் 2026 8:48:55 AM (IST)

பெண்ணை ஆபாசமாகச் சித்திரித்து வாட்ஸ்-அப்பில் பகிர்வு : இளைஞர் கைது!
சனி 15, ஆகஸ்ட் 2026 8:21:55 AM (IST)

மேல்மருவத்தூரில் ஆடிப்பூர விழா கோலாகலம் : லட்சக்கணக்கான செவ்வாடை பக்தர்கள் பங்கேற்பு!
வெள்ளி 14, ஆகஸ்ட் 2026 5:37:31 PM (IST)

டாஸ்மாக் கடைகளில் 11 வகை மதுபானங்களை விற்கத் தடை: விநியோகம் அதிரடி முடக்கம்!
வெள்ளி 14, ஆகஸ்ட் 2026 4:55:49 PM (IST)


