» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பள்ளிகளில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் : ஆட்சியர் தகவல்!
வெள்ளி 11, அக்டோபர் 2024 10:11:53 AM (IST)
திருநெல்வேலி மாவட்ட பள்ளிகளில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் அக்.15 முதல் தொடங்கி நடைபெறவுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் கா.ப.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இணைந்து நடத்தும் மாற்றுத் திறன் குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் 15.10.2024 முதல் தொடங்கி மாவட்டத்தின் 11 வட்டாரங்களிலும் நடைபெற உள்ளது.முதல் மருத்துவ முகாம் அக்டோபர் 15 ஆம் தேதி பாளையங்கோட்டை கிறிஸ்து ராஜா மேல்நிலைப் பள்ளியிலும், அக்டோபர் 18 ஆம் தேதி அம்பாசமுத்திரம் ஏ.வி.ஆர்.எம்.வி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியிலும், அக்டோபர் 22 ஆம் தேதி இரஸ்தா ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், அக்டோபர் 25 ஆம் தேதி இராதாபுரம் நித்திய கல்யாணி அரசு மேல்நிலைப்பள்ளியிலும்,
அக்டோபர் 29 ஆம் தேதி களக்காடு அரசு மேல்நிலைப் பள்ளியிலும், நவம்பர் 5 ஆம் தேதி சேரன்மகாதேவி பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், நவம்பர் 8 ஆம் தேதி முக்கூடல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும், நவம்பர் 12 ஆம் தேதி நாங்குநேரி சங்கர் ரெட்டியார் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், நவம்பர் 15 ஆம் தேதி பழைய பேட்டை மாநகராட்சி தொடக்கப் பள்ளியிலும், நவம்பர் 19 ஆம் தேதி வள்ளியூர் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், நவம்பர் 22 ஆம் தேதி சாந்தி நகர் வுனுவுயு தொடக்கப் பள்ளியில் வைத்தும் நடைபெற உள்ளது.
இந்த மருத்துவ முகாம்களில் கண் சிறப்பு மருத்துவர், காது மூக்கு தொண்டை சிறப்பு மருத்துவர், மனநல சிறப்பு மருத்துவர், எலும்பு மூட்டு சிறப்பு மருத்துவர், கண் பரிசோதனை தொழில் நுட்ப பணியாளர், பேச்சு மற்றும் கேட்டல் திறன் பரிசோதகர் ஆகியோர் கலந்து கொண்டு பரிசோதனை மேற்கொள்ள இருக்கின்றனர்.
மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு தேசிய அடையாள அட்டை, காதொலிக் கருவி, சக்கர நாற்காலி, மூன்று சக்கர சைக்கிள், நடைபயிற்சி உபகரணம் மற்றும் காலிபர் கருவி மேலும் மாதாந்திர உதவித்தொகை, முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டம், பஸ், இரயில் பயணச் சலுகை பெறுவதற்கான சான்று, போன்ற பல்வேறு சான்றிதழ்களும் கிடைப்பதற்கு இம்முகாமில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த மருத்துவ முகாமில் கலந்து கொள்ளும் மாற்றுத்திறன் குழந்தைகள் தேசிய அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை மற்றும் புகைப்படம் கொண்டு வர வேண்டும். இம்முகாம்களில் அந்தந்த வட்டாரங்களைச் சார்ந்த மாற்றுத்திறன் குழந்தைகள் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் கா.ப.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாஜகவின் அடிமைக் கூட்டணியை வீழ்த்திட உறுதியேற்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்
வியாழன் 22, ஜனவரி 2026 4:46:46 PM (IST)

சென்னை புத்தககண்காட்சியில் முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய நீர்மம் நாவல் வெளியிடு!
வியாழன் 22, ஜனவரி 2026 4:07:25 PM (IST)

தமிழக கடலோர பகுதிகளில் நாளை மழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!
வியாழன் 22, ஜனவரி 2026 4:04:51 PM (IST)

உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா 24ஆம் தேதி தொடங்குகிறது!
வியாழன் 22, ஜனவரி 2026 3:56:16 PM (IST)

தமிழக வெற்றிக் கழகத்துக்கு விசில் சின்னம் : இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
வியாழன் 22, ஜனவரி 2026 3:32:40 PM (IST)

எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் பியூஷ் கோயல் : கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் முடிவு..?
வியாழன் 22, ஜனவரி 2026 12:14:30 PM (IST)

