» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.6 லட்சம் மோசடி: தூத்துக்குடி தம்பதி கைது!
வெள்ளி 9, ஆகஸ்ட் 2024 10:24:26 AM (IST)
பூதப்பாண்டி அருகே அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.6 லட்சம் மோசடி செய்த தூத்துக்குடி தம்பதியை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள திடல் பகுதியை சேர்ந்தவர் ராஜகோபால் (37). பட்டதாரியான இவருக்கு தூத்துக்குடி மாவட்டம் சுப்பையார்புரம் 2-வது தெருவை சேர்ந்த செலின் சரத்ராஜ் மற்றும் அவரது மனைவி மஞ்சு ஆகியோரின் அறிமுகம் கிடைத்தது.
அப்போது, செலின் சரத்ராஜூம் அவரது மனைவியும் கிராம நிர்வாக அலுவலர் வேலை வாங்கி தருவதாக கூறி ராஜகோபாலிடம் ரூ.6 லட்சம் வாங்கியுள்ளனர். அதன்பிறகு அவர்கள் அரசு வேலை வாங்கி கொடுக்கவில்லை. மேலும், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் இருந்து வந்தனர். ஒரு கட்டத்தில் தம்பதி பணமோசடி செய்து ஏமாற்றியதை அறிந்த ராஜகோபால் அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர், இதுபற்றி ராஜகோபால் பூதப்பாண்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் செலின் சரத்ராஜ், அவரது மனைவி மஞ்சு ஆகிேயார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர்களை கைது செய்ய தூத்துக்குடிக்கு போலீசார் சென்றனர். ஆனால், அவர்கள் 2 பேரும் தலைமறைவாகி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அதன்பேரில் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தியதில் கணவன்-மனைவி இருவரும் ஊட்டியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து தனிப்படை போலீசார் ஊட்டிக்கு சென்று செலின் சரத்ராஜ், மஞ்சு ஆகிய 2 பேரையும் கைது செய்து பூதப்பாண்டிக்கு அழைத்து வந்தனர். பின்னர், போலீசார் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜார்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மானூர் அருகே நவீன ஆயத்த ஆடைகள் உற்பத்தி அலகு : ஆட்சியர் தொடங்கி வைத்தார்
புதன் 30, ஏப்ரல் 2025 5:10:03 PM (IST)

நடிகர் சங்கம் பதவி நீட்டிப்புக்கு எதிரான வழக்கு: கார்த்தி, விஷால் பதிலளிக்க உத்தரவு
புதன் 30, ஏப்ரல் 2025 4:30:13 PM (IST)

கடமை, கண்ணியம், சுய ஒழுக்கம் முக்கியம்: த.வெ.க. தொண்டர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்!
புதன் 30, ஏப்ரல் 2025 12:01:39 PM (IST)

2026ம் ஆண்டிலும் திராவிட மாடல் ஆட்சிதான் அமையும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி!
புதன் 30, ஏப்ரல் 2025 11:30:02 AM (IST)

பக்தர்களுக்கு அன்னதானம், மோர் வழங்க பதிவுச் சான்றிதழ் பெறுவது அவசியம்: ஆட்சியர்!
புதன் 30, ஏப்ரல் 2025 10:50:22 AM (IST)

நெல்லை பல்கலை. உதவி பேராசிரியருக்கு பாலியல் தொல்லை: பேராசிரியர் மீது வழக்குப்பதிவு!
புதன் 30, ஏப்ரல் 2025 10:44:19 AM (IST)
