» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
செல்போன் திருடனை மடக்கி பிடித்த பெண் காவலர்: டிஜிபி சைலேந்திர பாபு பாராட்டு!
செவ்வாய் 6, டிசம்பர் 2022 8:04:04 PM (IST)
செல்போன் திருடனை மடக்கி பிடித்த பெண் காவலரை டிஜிபி சைலேந்திர பாபு நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார்.,
சென்னை தாம்பரத்தில் பயணி ஒருவரிடம் இருந்து விலை உயர்ந்த 'ஐ- போனை' பறித்துக் கொண்டு பேருந்தில் இருந்து இறங்கி ஓட்டம் பிடித்த திருடனை பெண் காவலர் காளீஸ்வரி மடக்கி பிடித்தார். சாதுரியமாக செயல்பட்டு செல்போன் திருடனை மடக்கி பிடித்த பெண் காவலர் காளீஸ்வரியை, தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு அலுவலகத்திற்கு நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டு தெரிவித்தார்.