» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பைக் மீது வாகனம் மோதி 2 பக்தர்கள் பலி: தசரா திருவிழாவுக்கு வந்தபோது சோகம்!

வியாழன் 6, அக்டோபர் 2022 4:03:49 PM (IST)

சாத்தான்குளம் அருகே பைக் விபத்தில் குலசை தசரா திருவிழாவுக்கு வந்த 2 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 

நெல்லை மாவட்டம் களக்காடு காட்டுநாயக்கர் தெருவைச் சேர்ந்தவர் இசக்கி மகன் நாராயணன் (45), அதே ஊர் பத்மநேரி பகுதியைச் சேர்ந்தவர் பரமசிவன் மகன் முருகேசன் (26). இவர்கள் இருவரும் தசரா திருவிழாவில் சூரசம்ஹாரம் நிகழ்வை காண்பதற்காக நேற்று மோட்டார் பைக்கில் குலசேகரன்பட்டினம் வந்துள்ளனர். பின்னர் அவர்கள் இன்று காலை 6 மணியளவில் ஊருக்கு திரும்பிச் சென்று கொண்டிருந்தனர். 

சாத்தான்குளம் அருகே பேய்க்குளம் - முடங்கிபட்டி ரோட்டில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதியது. இவ்விபத்தில் பைக்கில் வந்த இருவரும் பலத்த காயம் அடைந்தனர். இதில், திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் நாராயணன் உயிரிழந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முருகேசன் இன்று காலை 10 மணியளவில் இறந்தார். விபத்து குறித்து சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory