» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பெண் டெய்லரின் உயிரை பறித்த புதிய ஸ்கூட்டர் : விளாத்திகுளம் அருகே பரிதாபம்!

வெள்ளி 12, ஆகஸ்ட் 2022 8:58:24 PM (IST)

விளாத்திகுளம் அருகே புதிய ஸ்கூட்டர் வாங்கிய சிறிது நேரத்தில் விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகேயுள்ள புதூரைச் சேர்ந்த சந்தன மகாலிங்கம் என்பவரது மனைவி வீரசெல்வி(42). இவர் புதூரில் டெய்லரிங் கடை வைத்துள்ளார். இவர் நேற்று மதியம் விளாத்திகுளத்தில் உள்ள அம்பாள் ஆட்டோஸ் என்ற யமகா ஷோரூமில் புதிய ஸ்கூட்டர் வாங்கியுள்ளார். புதிய இருசக்கர வாகனத்தினை வாங்கியதும் ஆசை, ஆசையாக எடுத்துக்கொண்டு தனது ஊருக்கு மகிழ்ச்சியுடன் சென்றுள்ளார்.

புதூர் அருகே செங்கோட்டை விலக்கு பகுதியில் சென்ற போது திடீரென நிலை தடுமாறி புதிய இருசக்கரவாகனம் சாலையில் விழுந்தது. இதில் வீரசெல்வி படுகாயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் வீரசெல்வியை மீட்டு புதூர் அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளித்து மேல்சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் அங்கு வீரசெல்வியை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். விபத்து குறித்து புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புதிய ஸ்கூட்டர் வாங்கி கொண்டு வீட்டுக்குச் செல்லும் வழியில் சிறிது நேரத்தில் விபத்தில் சிக்கி பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory