» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
குற்றால அருவியில் குளிக்க தடை நீக்கம் : சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
புதன் 18, மே 2022 5:14:13 PM (IST)
குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளம் சற்று குறைந்து குளிக்க தடை நீக்கப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தென்காசி மாவட்டம் குற்றாலம் மலைப்பகுதியில் கடந்த வாரம் விழா பெய்த கனமழை காரணமாக அருவிகளில் தண்ணீர் வரத்து ஏற்பட்டது இதனை அடுத்து உற்சாகத்துடன் சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர். இந்நிலையில் குற்றாலம் மலைப் பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இன்று மெயின் அருவியில் தண்ணீர் வரத்து திடீரென அதிகரித்தது.
அருவியில் விழுந்த தண்ணீரில் கற்கள், மரக்கட்டைகள் அடித்து வரப்பட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருவியில் குளிக்க போலீசார் தடை விதித்தனர். அருவிக்குச் செல்லும் வழியில் பேரிக்காட் மற்றும் கயிறு மூலம் தடுப்பு ஏற்படுத்தியிருந்தனர். இதனால் ஏமாற்றம் அடைந்த சுற்றுலாப்பயணிகள் சாரல் மழையில் நனைந்து கொண்டே அருவியை ஏக்கத்துடன் பார்த்து சென்றனர். மாலையில் தண்ணீர் வரத்து சற்று குறைந்ததால் குளிக்க தடை நீக்கப்பட்டது. இதனையடுத்து உற்சாகமாக சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.