» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வேட்பாளர்களுக்கான கட்டுத்தொகையை இரு மடங்காக உயர்த்துவதா? - சீமான் கண்டனம்

செவ்வாய் 25, ஜனவரி 2022 10:11:03 AM (IST)

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வேட்பாளர்களுக்கான டெபாசிட் தொகையை இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்

இது தொடர்டபாக அவர் விடுத்துள்ள அறிக்கை: நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் வேட்பாளர்களுக்கான கட்டுத் தொகை இருமடங்காக உயர்த்தப்பட்டிருக்கும் செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன். எளியப் பின்புலம் கொண்ட மக்கள், அதிகார அடுக்குகளில் அமர்வதற்கான வாய்ப்பாக இருக்கும் உள்ளாட்சித்தேர்தலில் அவர்களின் சனநாயகப் பங்கேற்பினை தடை செய்வதுபோல, கட்டுத்தொகையை இரட்டிப்பாக உயர்த்திருக்கும் தமிழகத்தேர்தல் ஆணையத்தின் முடிவு கண்டனத்திற்குரியது.

அரசியல் என்பது வணிகமாகவும், கட்சிகள் என்பவை நிறுவனங்களாகவும், பணம் என்பது தேர்தல் அரசியலின் அச்சாணியாகவும் மாறிப்போயிருக்கிற தற்காலக் கொடுஞ்சூழலில், அவற்றிற்கெதிராக அடித்தட்டு உழைக்கும் மக்களும், எளிய மனிதர்களும் சனநாயகத்தை நிலைநிறுத்த போராடிக் கொண்டிருக்கையில், வேட்பாளர்களுக்கான கட்டுத்தொகையினை உயர்த்தியிருப்பது ஏற்கவே முடியாத பெருங்கொடுமையாகும்.

மாநகராட்சி உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ரூ.4 ஆயிரம், நகராட்சி உறுப்பினர் பதவிக்கு ரூ.2 ஆயிரம், பேரூராட்சி உறுப்பினர் பதவிக்கு ரூ.1,000 என உயர்த்தப்பட்டிருக்கும் இக்கட்டுத்தொகை எளிய மனிதர்களும், பெண்களும் தேர்தலில் போட்டியிடுவதற்குப் பெருஞ்சுமையாக மாறக்கூடும். பெண்களுக்கான பிரதிநிதித்துவம் முதன்மைப் பெற்றிருக்கும் இத்தேர்தல் களத்தில், அதற்குத் தடைக்கற்களாக இத்தொகை உயர்வு இருக்குமென்பதால், பழைய நடைமுறையைப் பின்பற்றுவதே சரியாக இருக்கும். ஆகவே, வேட்பாளர்களுக்கான கட்டுத் தொகை இரட்டிப்பு மடங்காக்கும் அறிவிப்பினை தமிழகத் தேர்தல் ஆணையம் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்துகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

CRUZ MICHEL என்ற வெளிநாட்டு மத கைக்கூலி அவர்களுக்குJan 26, 2022 - 09:15:15 AM | Posted IP 162.1*****

அப்படியே சொல்லிகிட்டே இரு, திருட்டு திராவிட அரசியல்வாதிகள் வாழும் நாட்டில் நீ அரசியல்வாதிகளுக்கு ஓட்டு போட்டால் எதிர்காலம் உனக்கு இல்லை, அரசியல்வாதிகளுக்கும் அவர்பிள்ளைகளுக்கும் அவர் குடும்பத்துக்கு மட்டும் தான் உண்டு. உழைக்காமல் , படிக்காமல் நேராக அரசியல்வாதிகள் ஆகலாம், கோடிக்கணக்கான சொத்துக்கள் சேர்க்கலாம், கொள்ளையடிக்கலாம் நாட்டில் நிறைய நடந்துகொண்டு இருக்கிறது... முட்டாள்கள் வாழும் நாட்டில் உறுப்படுவது இல்லை.

CRUZ MICHEL என்ற வெளிநாட்டு மத கைக்கூலி அவர்களுக்குJan 26, 2022 - 09:15:09 AM | Posted IP 108.1*****

அப்படியே சொல்லிகிட்டே இரு, திருட்டு திராவிட அரசியல்வாதிகள் வாழும் நாட்டில் நீ அரசியல்வாதிகளுக்கு ஓட்டு போட்டால் எதிர்காலம் உனக்கு இல்லை, அரசியல்வாதிகளுக்கும் அவர்பிள்ளைகளுக்கும் அவர் குடும்பத்துக்கு மட்டும் தான் உண்டு. உழைக்காமல் , படிக்காமல் நேராக அரசியல்வாதிகள் ஆகலாம், கோடிக்கணக்கான சொத்துக்கள் சேர்க்கலாம், கொள்ளையடிக்கலாம் நாட்டில் நிறைய நடந்துகொண்டு இருக்கிறது... முட்டாள்கள் வாழும் நாட்டில் உறுப்படுவது இல்லை.

CRUZ MICHELJan 25, 2022 - 02:32:30 PM | Posted IP 108.1*****

வந்துட்டான்யா இந்த காமெடி பீஸ்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory