» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பிறந்து 2 மாதமே ஆன குழந்தையை வைத்து சூதாட்டம்: தந்தை உட்பட 3 பேர் கைது

திங்கள் 24, ஜனவரி 2022 4:10:48 PM (IST)

திருச்சியில் பிறந்து 2 மாதங்களே ஆன ஆண் குழந்தையை வைத்து சூதாடிய குழந்தையின் தந்தை  உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி உறையூர் அருகே பாண்டமங்கலத்தைச் சேர்ந்தவர் அப்துல் சலாம் (37), இவரது மனைவி கைருன்னிசா. இவர்களுக்கு ஏற்கனவே நான்கு குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக அப்துல் சலாம் - கைருன்னிகா தம்பதிக்கு 5வதாக ஆண் குழந்தை பிறந்தது. சூதாட்ட பிரியரான அப்துல் சலாம், பிறந்து 2 மாதமான ஆண் குழந்தையை ஈடாக வைத்து, சூதாடி உள்ளார்.

அதில், ஆரோக்கியராஜ் என்பவரிடம் தோற்ற குழந்தையை தொட்டியம் அருகே உள்ள கீழடி நிவாச நல்லூரை சேர்ந்த சந்திரகுமார் என்பவர் 80 ஆயிரம் ரூபாய் விலைக்கு வாங்கியுள்ளார். இது பற்றிய தகவல் அறிந்த உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையை வைத்து சூதாடிய அப்துல் சலாம், அதை விற்ற ஆரோக்கியராஜ், வாங்கிய சந்தன குமார் ஆகிய 3 பேரையும் கைது செய்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory