» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மதுரை கோட்டத்தில் பிளாட்பாரம் டிக்கெட் கட்டணம் குறைப்பு : தெற்கு ரயில்வே தகவல்

வியாழன் 25, நவம்பர் 2021 8:00:27 PM (IST)

மதுரை கோட்டத்தில் நடைமேடை சீட்டு கட்டணம் ரூபாய் 10 ஆக குறைக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிடட அறிக்கையில், கொரோனா தொற்று காலத்தில் ரயில் நிலையங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும் அதிக கூட்டம் சேருவதை தவிர்க்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதன் ஒரு பகுதியாக மதுரை கோட்டத்தில் மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி ஆகிய ரயில் நிலையங்களில் நடைமேடை சீட்டு கட்டணம் ரூபாய் 10 லிருந்து ரூபாய் 50 ஆக உயர்த்தப்பட்டது.  

தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதால் மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி ஆகிய இடங்களில் நடைமேடை சீட்டு கட்டணம் ரூபாய் 10 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண மாற்றம் நவம்பர் 25/26 நடு இரவு 00.00 மணி முதல் அமலுக்கு வருகிறது. இருந்த போதிலும் ரயில் பயணிகள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளான கை கழுவுதல், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் ஆகியவற்றை கடைப்பிடிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory