» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருநெல்வேலி திருமண்டலத்தின் 16வது பேராயராக பர்னபாஸ் நாளை பதவியேற்பு!

சனி 20, நவம்பர் 2021 4:25:15 PM (IST)

தென்னிந்திய திருச்சபை திருநெல்வேலி திருமண்டலத்தின் 16வது பேராயராக பர்னபாஸ் நாளை பதவியேற்கிறார்.

பாளையங்கோட்டை, தூய திரித்துவ பேராலயத்தில் வைத்து நடைபெறும் விழாவில் திருநெல்வேலி திருமண்டலத்தின் 16வது பேராயராக  பர்னபாஸ் நாளை பதவியேற்கிறார். விழாவில் தென்னிந்திய திருச்சபையின் பிரதமப் பேராயர் தர்மராஜ் ரசாலம் அருட்பொழிவு நடைபெறுகிறது. தொடர்ந்து பேராயரை ஆசனத்தில் அமர்த்தும் ஆராதனை நடைபெறும். 

மாலை 5 மணிக்கு பெருமாள்புரம் சாராள் தக்கர் கல்லூரி வளாகத்தில் சிறப்பு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது."விழா ஏற்பாடுகளை லே" செயலர் ஜெயசிங், மேல்நிலைக்கல்வி நிலைவரக்குழு செயலர் ஞானதிரவியம்,  ஒருங்கிணைப்பாளர்கள் பொருளாளர்  மனோகர், திருமண்டல உபதலைவர் சுவாமிதாஸ், குருத்துவ செயலர் பாஸ்கர் கனகராஜ், பிரதம பேராயரின் ஆணையாளர் சந்திரசேரகன் மற்றும் திருமண்டல நிர்வாகிகள் செய்து வருகின்றனர். 


மக்கள் கருத்து

Jebasingh Jeyapaul, Doha, QatarNov 21, 2021 - 10:49:12 AM | Posted IP 162.1*****

Congratulations to My Beloved Iyah.

ALEX JOHNSONNov 20, 2021 - 06:42:23 PM | Posted IP 117.2*****

THANKS TO THE LORD

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory