» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருநெல்வேலி திருமண்டலத்தின் 16வது பேராயராக பர்னபாஸ் நாளை பதவியேற்பு!
சனி 20, நவம்பர் 2021 4:25:15 PM (IST)
தென்னிந்திய திருச்சபை திருநெல்வேலி திருமண்டலத்தின் 16வது பேராயராக பர்னபாஸ் நாளை பதவியேற்கிறார்.
பாளையங்கோட்டை, தூய திரித்துவ பேராலயத்தில் வைத்து நடைபெறும் விழாவில் திருநெல்வேலி திருமண்டலத்தின் 16வது பேராயராக பர்னபாஸ் நாளை பதவியேற்கிறார். விழாவில் தென்னிந்திய திருச்சபையின் பிரதமப் பேராயர் தர்மராஜ் ரசாலம் அருட்பொழிவு நடைபெறுகிறது. தொடர்ந்து பேராயரை ஆசனத்தில் அமர்த்தும் ஆராதனை நடைபெறும்.
மாலை 5 மணிக்கு பெருமாள்புரம் சாராள் தக்கர் கல்லூரி வளாகத்தில் சிறப்பு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது."விழா ஏற்பாடுகளை லே" செயலர் ஜெயசிங், மேல்நிலைக்கல்வி நிலைவரக்குழு செயலர் ஞானதிரவியம், ஒருங்கிணைப்பாளர்கள் பொருளாளர் மனோகர், திருமண்டல உபதலைவர் சுவாமிதாஸ், குருத்துவ செயலர் பாஸ்கர் கனகராஜ், பிரதம பேராயரின் ஆணையாளர் சந்திரசேரகன் மற்றும் திருமண்டல நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
Jebasingh Jeyapaul, Doha, QatarNov 21, 2021 - 10:49:12 AM | Posted IP 162.1*****