» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பைக் மீது மினி லாரி மோதி நிதி நிறுவன ஊழியர் பலி : தென்காசி அருகே சோகம்

சனி 20, நவம்பர் 2021 3:42:18 PM (IST)

தென்காசி அருகே பைக் மீது மினி லாரி மோதிய விபத்தில் நிதி நிறுவன ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார். 

தென்காசி மாவட்டம், கடையம் அருகே உள்ள புலவனூரை சேர்ந்தவர் அய்யங்கண்ணு மகன் கதிர்வேல் (23). இவர் தென்காசியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு மோட்டார் பைக்கில் தென்காசியில் இருந்து அம்பை - தென்காசி சாலையில் ஊருக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மினி லாரி அவரது பைக் மீது மோதியது. 

இதில் பலத்த காயம் அடைந்த கதிர்வேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.  தகவல் அறிந்ததும் பாவூர்சத்திரம் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மினி லாரியை ஓட்டி வந்த தென்காசி பாறையடி தெருவைச் சேர்ந்த டிரைவர் ஜமால்மைதீன் என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory