» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வளர்ப்பு தந்தையால் உயிரோடு எரிக்கப்பட்ட 10 வயது சிறுமி உயிரிழப்பு : கொலைவழக்குப் பதிவு

சனி 20, நவம்பர் 2021 3:31:23 PM (IST)

நெல்லை அருகே உயிரோடு எரிக்கப்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி இறந்தாள். இதையடுத்து வளர்ப்பு தந்தை மீது போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் பெரியவிளையை சேர்ந்தவர் ஜேசு அந்தோணிராஜ் (45), கூலித்தொழிலாளி. இவர் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஒரு மகனும், 2 மகள்களுடன் வசித்து வந்த சுஜா (33) என்பவரை கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு ஜேசு அந்தோணிராஜ் 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.

கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஜேசு அந்தோணி ராஜ், சுஜா மற்றும் குழந்தைகளுடன் நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள காவல் கிணறு பாரதி நகரில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்கள். அங்குள்ள ஒரு ஓட்டலில் கணவன்-மனைவி வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் சுஜாவின் கடைசி மகள் மகேஷ்வரி (10) நேற்று முன்தினம் அங்குள்ள கடைக்கு பொருட்கள் வாங்க சென்றார். அப்போது அந்த கடையில் இருந்து தின்பண்டத்தை எடுத்து வந்து விட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கடைக்காரர், அந்தோணி ராஜிடம் தெரிவித்துள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த அந்தோணிராஜ் வீட்டில் இருந்த சிறுமி மகேஸ்வரியின் தலையில் மண்எண்ணையை ஊற்றி உயிரோடு தீ வைத்தார். அலறி துடித்த மகேஸ்வரி வலி தாங்க முடியாமல் அந்தோணி ராஜை கட்டி பிடித்தாள். இதில் அந்தோணிராஜ் உடலிலும் காயம் ஏற்பட்டது. இவர்களது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு நாகர்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இதுகுறித்து பணகுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சகாய சாந்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்நிலையில் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வந்த சிறுமி மகேஸ்வரி உடல்நிலை மிகவும் மோசம் அடைந்து காணப்பட்டது. நேற்று நள்ளிரவு மகேஸ்வரி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தாள். அந்தோணிராஜ் உடல் நலம் தேறி வருகிறார். இதையடுத்து போலீசார் வழக்கை, கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory