» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நவம்பர் 25 முதல் ஐந்து ரயில்களில் முன்பதிவில்லாத ரயில் பெட்டிகள் : தெற்கு ரயில்வே தகவல்

வெள்ளி 19, நவம்பர் 2021 9:28:40 PM (IST)

நவம்பர் 25 முதல் வைகை, பல்லவன், பாலருவி, அந்தியோதயா மற்றும் புனலூர் விரைவு ரயில்களில் நவம்பர் 25 முதல் முன்பதிவில்லாத ரயில் பெட்டிகள் இணைக்கப்பட இருக்கின்றன. 

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில், வண்டி எண் 12636/12635   மதுரை - சென்னை - மதுரை வைகை விரைவு ரயில் மற்றும் வண்டி எண் 02606/02605 காரைக்குடி - சென்னை - காரைக்குடி பல்லவன் விரைவு ரயில் ஆகியவற்றில் 3 முன் பதிவில்லாத ரயில் பெட்டிகளும், வண்டி எண் 16191/16192 தாம்பரம் - நாகர்கோயில் - தாம்பரம் அந்தியோதயா விரைவு ரயிலில் 6 முன்பதிவில்லாத ரயில் பெட்டிகளும், வண்டி எண் 16791/16792 திருநெல்வேலி - பாலக்காடு - திருநெல்வேலி பாலருவி விரைவு ரயில்களில் 4 முன்பதிவில்லாத ரயில் பெட்டிகளும் மற்றும் வண்டி எண் 16729/16730 மதுரை - புனலூர் - மதுரை ரயில்களில் 4 முன்பதிவில்லாத ரயில் பெட்டிகளும்  நவம்பர் 25 முதல்  இணைக்கப்படுகின்றன என அறிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory