» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழகத்தில் நவம்பர் 1-ம் தேதி நர்சரி பள்ளிகள் திறப்பு இல்லை: அரசு அறிவிப்பு
சனி 23, அக்டோபர் 2021 11:09:25 AM (IST)
தமிழகத்தில் மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகள் தற்போது திறக்கப்படாது என அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் நவம்பர் 1-ம் தேதி முதல் 1 ம் வகுப்பு முதல் 8 வரையிலான பள்ளிகள் திறக்கப்படுகிறது. ஏற்கனவே 9,10,11 மற்றும் வகுப்புகளுக்கான பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கிடையே மழலையர்கள் பள்ளிகளும் நவம்பர் 1-ம் தேதி முதல் திறக்கப்படும் என அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகள் தற்போது திறக்கப்படாது என அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும், மழலையர் பள்ளிகளை திறப்பது தொடர்பாக பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.