» செய்திகள் » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தூத்துக்குடியில் தீக்குளித்து இளம்பெண் தற்கொலை: காப்பாற்ற முயன்ற கணவன் படுகாயம்!!

புதன் 25, ஜனவரி 2012 11:58:00 AM (IST)

தூத்துக்குடி பாண்டுரங்கன் தெருவைச் சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி செல்வி (24). இந்த தம்பதியருக்கு கடந்த ஒன்றேகால் ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 4மாத ஆண் குழந்தை குழந்தை உள்ளது. திருமணத்திற்கு பின்னர் சங்கர் மனைவியை விட்டுவிட்டு அடிக்கடி தனது தாயார் வீட்டுக்குச் சென்றுவிடுவாராம். 

இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. கடந்த பொங்கல் பண்டிகைக்கு தாயார் வீட்டுக்கு சென்ற அவர் 2நாட்களுக்கு பின்னர்தான் வீடு திரும்பினாராம். இதனால் மனைவி செல்வி மனவருத்தம் அடைந்தார். இதுதொடர்பாக கணவரிடம் வாக்குவதத்தில் ஈடுபட்டார். இனிமேல் இதுபோன்று நடந்தால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டினாராம். 

மேலும், தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொண்டார். இதில் படுகாயம் அடைந்த செல்வி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரை காப்பாற்ற முயன்று படுகாயமடைந்த கணவர் சிகிச்சை பெற்று வருகிறார். தூத்துக்குடி வடபாகம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். திருமணமாகி ஒன்றேகால் ஆண்டுகளே ஆனதால் ஆர்டிஓ விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து

மணிவெள்ளி 27, ஜனவரி 2012 - 03:45:40 PM | Posted IP 220.2*****

பெற்றோர் வீட்டுக்கு போககுடாத என்ன கொடுமை

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory