» செய்திகள் » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

அரசின் திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களை சென்றடையும் : குமரி புதிய ஆட்சியர் நாகராஜன்

வெள்ளி 20, ஜனவரி 2012 5:30:52 PM (IST)



குமரி மாவட்ட ஆட்சியராக இருந்த மதுமதி சென்னை மாவட்ட ஆட்சியராக மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக வேலூர் மாவட்ட ஆட்சியர் நாகராஜன் குமரி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.

இன்று அவர் குமரி மாவட்டத்தின் 48வது ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டார். மாவட்ட வருவாய் அதிகாரி பழனிச்சாமி சார் ஆட்சியர் வெங்க டேஷ், மாவட்ட திட்ட அலுவலர் மந்திராசலம் மற்றும் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர். 

பின்னர்  ஆட்சியர்   நாகராஜன் நிருபர்களிடம் கூறியதாவது, வரலாற்று சிறப்பு மிக்க கலாச்சாரம் மிக்க குமரி மாவட்டத்தில் அரசின் நலத்திட்டங்கள் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.அரசின் திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களை சென்றடையும் வகையில் அதிகாரிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தெரிவித்தார்.


மக்கள் கருத்து


ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory