» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
அஞ்சல் துறை சார்பில் இளைஞர்களுக்கு இலவச பயிற்சி : ஜூன் 15 வரை விண்ணப்பிக்கலாம்!
புதன் 11, ஜூன் 2025 8:38:13 AM (IST)
கன்னியாகுமரி கோட்டத்தில் அஞ்சல் துறை சார்பில் இளைஞர்களுக்கு இலவச பயிற்சி ஜூன் 20-ம் தேதி தொடங்குகிறது.
கன்னியாகுமரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய தபால் துறையும், இளைஞர் நலத்துறை மற்றும் விளையாட்டு அமைச்சகமும் இணைந்து, இளைஞர்களுக்காக ஒரு புதிய இலவச செய்முறை பயிற்சி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
"செய்முறை பயிற்சி திட்டம்" என அழைக்கப்படும் இந்த பயிற்சிக்கு, மை பாரத் போர்ட்டல் (www.mybharat.gov.in) வாயிலாக விண்ணப்பிக்கலாம். குமரி மாவட்டத்தில் 188 கிளை தபால் நிலையங்களுக்கு தலா 2 பேர் வீதம் 376 பயிற்சியாளர்கள் இதில் சேரலாம். பயிற்சி வருகிற 20-ந் தேதி முதல் அடுத்த மாதம் 7-ந் தேதி வரை 15 நாட்கள் (மொத்தம் 120 மணி நேரங்கள்) நடைபெறும். குறைந்தபட்சம் உயர்நிலைப்பள்ளி தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சியின் முக்கிய அம்சங்கள் விவரம் வருமாறு:-
தபால் துறை செயல்பாடுகள் குறித்த அடிப்படை வழிகாட்டல், பார்சல் வகைப்படுத்துதல், வினியோகம், கவுண்ட்டர் பணிகள், ஆவண கையாளல் மற்றும் தபால் நிலைய உதவிப்பணிகள், தபால் நிலைய சேமிப்புத் திட்டங்கள், தபால் ஆயுள் காப்பீடு மற்றும் தபால் தலை சேகரிப்பு பற்றிய விழிப்புணர்வு "டாக் சவ்பால்" எனும் தபால் கிராம சபைக்கூட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பு போன்ற பயிற்சிகள் அளிக்கப்படும்.
இந்த பயிற்சி இளைஞர்களை சமூக சேவையில் ஈடுபடுத்துவதோடு தபால் துறையின் கிராமப்புற சமூக பங்களிப்பை நேரில் அறிந்து கொள்ளும் அரிய வாய்ப்பாக அமைகிறது. விண்ணப்பிக்க கடைசி தேதி வருகிற 15-ந் தேதி ஆகும். விண்ணப்பங்களை www.mybharat.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்யலாம். தகுதியுள்ளவர்கள் தவறாமல் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் தொழில் பழகுநர் பயிற்சி: பட்டதாரிகள் விண்ணப்பிக்க அழைப்பு!
வெள்ளி 17, ஜூலை 2026 4:42:15 PM (IST)

நாகர்கோவில் - கோவை அதிவிரைவு ரயிலில் கூடுதலாக ஒரு படுக்கை வசதிப் பெட்டி தற்காலிக இணைப்பு!
வெள்ளி 17, ஜூலை 2026 4:25:32 PM (IST)

நாகர்கோவில் கிளைச் சிறையில் கைதிகளின் பாதுகாப்பு கேள்விக்குறி: சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு!
வெள்ளி 17, ஜூலை 2026 3:43:19 PM (IST)

இந்து முன்னணி நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு: மாநிலத் துணைத் தலைவர் கண்டனம்!
வெள்ளி 17, ஜூலை 2026 11:01:05 AM (IST)

சென்னை - கன்னியாகுமரி புல்லட் ரயில் திட்டம்: நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் வலியுறுத்தல்!
வியாழன் 16, ஜூலை 2026 4:59:47 PM (IST)

சபரிவர்மன் கொலை வழக்கு: தென் தாமரைக்குளம் எஸ்.ஐ., ஆயுதப்படைக்கு மாற்றம்!
வியாழன் 16, ஜூலை 2026 4:24:17 PM (IST)


