» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு : எஸ்பி தகவல்!
வெள்ளி 29, நவம்பர் 2024 8:14:55 PM (IST)
தூத்துக்குடி மாவட்ட ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தூத்துக்குடி மாவட்டத்தில் 25 ஆண்கள், 3 பெண்கள் என 28 ஊர்க்காவல் படை பணியிடங்களையும், 7 (ஆண்கள் மட்டும்) மீனவ இளைஞர் ஊர்க்காவல் படை பணியிடங்களையும் நிரப்ப தேர்வு செய்யப்பட உள்ளனர்.இதில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த உடல் தகுதியுடன் உள்ள 18 வயதிற்கு மேற்பட்ட 50 வயதிற்க்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் தேர்வில் கலந்து கொள்ளலாம். இத்தேர்வு வருகிற 02.12.2024 அன்று காலை 10.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக கவாத்து மைதானத்தில் வைத்து நடைபெற உள்ளது.
மேற்படி தேர்வில் கலந்து கொள்ள வருபவர்கள் படிப்பு சான்றிதழ், வயது நிரூபணத்திற்கான சான்றிதழ், வேலை/தொழில் விபரத்துடன் கூடிய சுயவிபர குறிப்பு (Bio - Data), பாஸ்போர்ட் அளவு புகைப்படம் (2), அசல் சான்றிதழ் மற்றும் நகலுடன் வர வேண்டும் என்றும், மீனவ இளைஞர்கள் ஊர்க்காவல் படைக்கு விண்ணப்பிப்பவர்களாக இருப்பின் மீனவ இளைஞர் என்பதற்கான அடையாள அட்டையுடன் வர வேண்டும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பராமரிப்பு பணி: வைஷ்ணவ தேவி கத்ரா-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம்!
வியாழன் 22, ஜனவரி 2026 12:41:55 PM (IST)

குமரி மாவட்டத்தில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது: 2 வாகனங்கள் பறிமுதல்!
செவ்வாய் 20, ஜனவரி 2026 4:51:47 PM (IST)

நாகர்கோவிலில் பராமரிப்பு பணி: 5 விரைவு ரயில்கள் கன்னியாகுமரியில் இருந்து புறப்படும்!
செவ்வாய் 20, ஜனவரி 2026 4:20:22 PM (IST)

பொங்கல் விடுமுறை: விவேகானந்தர் நினைவு மண்டபத்தை 4 நாட்களில் 72,464 பேர் பார்வை...!
திங்கள் 19, ஜனவரி 2026 9:05:50 PM (IST)

கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பேரணி : விவசாயிகள் சங்கம் அறிவிப்பு
திங்கள் 19, ஜனவரி 2026 5:29:47 PM (IST)

அகஸ்தீஸ்வரம் அருகே மின்சார ரயில் இஞ்சின் பராமரிப்பு தொழிற்கூடம்: பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகுமா?
திங்கள் 19, ஜனவரி 2026 5:04:51 PM (IST)

