» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
மனைவியை கொலை செய்த கணவனுக்கு ஆயுள் தண்டனை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!
புதன் 31, ஜூலை 2024 3:08:20 PM (IST)
மனைவியை கொலை செய்த கணவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

இவ்வழக்கை அப்போதைய குலசேகரன்பட்டினம் காவல் நிலைய ஆய்வாளர் மீனாட்சிநாதன் புலன் விசாரணை செய்து கடந்த 26.07.2016 அன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார்.
இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி மாதவ ராமானுஜம் இன்று குற்றவாளியான நவீன்குமாருக்கு இந்திய தண்டனைச் சட்டம் 302 பிரிவின்படி ஆயுள் தண்டனை ரூ.2,000 அபராதமும், இந்திய தண்டனைச் சட்டம் 316 பிரிவின்படி 7 வருடம் கடுங்காவல் சிறை தண்டனை ரூ.1000 அபராதமும் விதித்து மேற்படி சிறை தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தவிட்டு தீர்ப்பு வழங்கினார்.
இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய குலசேகரன் பட்டினம் காவல் நிலைய ஆய்வாளர் மீனாட்சிநாதன் மற்றும் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட சிறப்பு அரசு தரப்பு வழக்கறிஞர் எல்லம்மாள், விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமை காவலர் முருகன் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் பாராட்டினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பணி நியமன ஆணை..!
சனி 15, பிப்ரவரி 2025 5:44:14 PM (IST)

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மீனவருக்கு 20 ஆண்டு சிறை : நாகர்கோவில் நீதிமன்றம் தீர்ப்பு
சனி 15, பிப்ரவரி 2025 3:42:45 PM (IST)

கனிமவளங்களை கடத்த அரசே அனுமதி அளிப்பதா? அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு!
சனி 15, பிப்ரவரி 2025 11:57:45 AM (IST)

கோழிக்கோடு சி.எஸ்.ஐ. தமிழ் ஆலய பிரதிஷ்டை விழா: குமரிப் பேராயர் செல்லையா பங்கேற்பு!
சனி 15, பிப்ரவரி 2025 8:32:14 AM (IST)

சொத்துக்குவிப்பு வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் விடுதலை!
வெள்ளி 14, பிப்ரவரி 2025 5:48:59 PM (IST)

நாகர்கோவிலில் பிப்.19ம் தேதி 6வது புத்தகத் திருவிழா தொடக்கம் : ஆட்சியர் அழகுமீனா தகவல்
வியாழன் 13, பிப்ரவரி 2025 3:53:01 PM (IST)

rajtutJul 31, 2024 - 04:29:13 PM | Posted IP 162.1*****