» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
மினி பஸ்சுக்குள் புகுந்து கண்டக்டர் மீது தாக்குதல்: 6 பேர் மீது வழக்கு!!!
ஞாயிறு 19, மே 2024 9:21:37 PM (IST)
நாகர்கோவில் புது குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சகாய ஜோஸ் (25). இவர் மினி பஸ்ஸில் கண்டக்டராக உள்ளார். பஸ்ஸில் பயணிகளை ஏற்றுவது தொடர்பாக சகாய ஜோசுக்கும் மற்றொரு மினி பஸ்பணியாளர்களுக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று வடசேரி அண்ணா ஸ்டேடியம் அருகே பயணிகளை ஏற்றுவதற்காக சகாய ஜோஸ் பணியாற்றும் மினி பஸ் நின்று கொண்டு இருந்தது.கண்டக்டர் சகாய ஜோஸ் பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது 6- பேர் கொண்ட கும்பல் இரும்பு கம்பிகளுடன் பஸ்சில் புகுந்து சகாய ஜோசை தாக்கினர்.
பஸ்சில் இருந்த பயணிகள் அலறினர்.அந்த கும்பல் கொலை மிரட்டல் விடுத்து தப்பி சென்றனர்.இந்த சம்பவம் குறித்து சகாய ஜோஸ் வடசேரி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி இறச்சகுளத்தை சேர்ந்த கமல்ராஜ், மேக்காமண்டபம் பிரகலாதன் (32) அருகு விளை அபினேஷ் (27) மற்றும் மகேஷ், கோவிந்தன் உட்பட ஆறு பேர் மீது வழக்கு பகுதி செய்து விசாரித்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசுப்பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க ஆர்வம் : ஆட்சியர் ஆர்.அழகுமீனா தகவல்
புதன் 30, ஏப்ரல் 2025 12:49:55 PM (IST)

குமரி மாவட்டத்தில் தமிழ்வார விழா: ஆட்சியர் ஆர்.அழகுமீனா துவக்கி வைத்தார்!
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 5:10:36 PM (IST)

அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி பேராசிரியருக்கு தேசிய உலகளாவிய விருது
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 3:22:17 PM (IST)

முதியவர்கள் சாலையை கடக்க உதவும் பெண் காவலர்கள் : பொதுமக்கள் பாராட்டு!
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 11:40:37 AM (IST)

குமரி மாவட்டத்தில் மே 1ம் தேதி மதுக்கடைகளை மூட ஆட்சியர் அழகுமீனா உத்தரவு!
திங்கள் 28, ஏப்ரல் 2025 5:01:42 PM (IST)

நன்கு பயின்று பெற்றோரின் கனவை நிறைவேற்ற வேண்டும்: மாணவர்களுக்கு ஆட்சியர் அறிவுரை
திங்கள் 28, ஏப்ரல் 2025 4:49:22 PM (IST)
