» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நாகர்கோவிலில் குடிநீர் விநியோகம் 7 நாட்கள் ரத்து : மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு
செவ்வாய் 27, செப்டம்பர் 2022 5:16:04 PM (IST)
நாகர்கோவிலில் இடலாக்குடி, வடசேரி உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் 7 நாட்கள் தாமதம் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "நாகர்கோவில் மாநகராட்சிக்கு சொந்தமான முக்கடல் அணையிலிருந்து கிருஷ்ணன் கோவில் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு வரும் 600mm பிரதான குழாயில் நாகர்கோவில் திட்டுவிளை ரோட்டில் துவரங்காடு Petrol bunk அருகில், இசாந்திமங்கலம் கிராம நிர்வாக அலுவலகம் மற்றும் பஞ்சாயத்து அலுவலகம் அருகில் மற்றும் அருகுவிளை வெள்ளாளர் தெரு ஆகிய நான்கு இடங்களில் பழுது ஏற்பட்டு தண்ணீர் விரையம் ஆகுவதால் மேற்படி பழுதுகளை சரி செய்ய வேண்டி உள்ளது.
இதனால் நகரில் இடலாக்குடி, வடிவீஸ்வரம், வாகையடி கோட்டார், வடசேரி போன்ற பகுதிகளில் குடிநீர் விநியோகம் 7 நாட்கள் தாமதம் ஆகும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.