» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
ஜாமீனில் வந்தவரை உடனே பிடித்துச்சென்ற போலீஸ் : காவல் நிலையத்தில் உறவினர்கள் முற்றுகை!
சனி 6, ஆகஸ்ட் 2022 4:35:04 PM (IST)
நாகர்கோவிலில் ஜாமீனில் வந்தவரை மற்றொரு வழக்கில் போலீசார் உடனே பிடித்துச் சென்றதால் அவரது குடும்பத்தினர் போராட்டம் நடத்தினர்.
குமரி மாவட்டம், பூதப்பாண்டியில் ஒரு வழக்கில் பிணை பெற்று நாகர்கோவில் கிளை சிறையில் இருந்து வெளியே வந்தவரை அதே சிறை வாசலிலேயே வைத்து பூதப்பாண்டி போலீசார் பிடித்து சென்றனர். இதனால் அதிர்ச்சியில் அவர் தாய் மற்றும் உறவினர்கள் பூதப்பாண்டி காவல் நிலையத்தை முற்றுகையிட்டதோடு சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். .