» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தூத்துக்குடியில் வழக்கறிஞரின் பைக் திருட்டு : ரவுடி கைது!

புதன் 18, மே 2022 10:25:29 AM (IST)

தூத்துக்குடியில் வழக்கறிஞரின் பைக்கை திருடியதாக ரவுடியை போலீசார் கைது செய்தனர். 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி பி அன் டி காலனியை சேர்ந்தவர் சுப்பையா மகன் பழனிவேல் ராஜன் (38). வழக்கறிஞர். இவர் தனது மோட்டார் பைக்கை 3வது மைல் பகுதியில் உள்ள கடை முன்பு நிறுத்திவிட்டு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது பைக் திருடுபோயிருந்தது. 

இதுகுறித்து அவர் தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முத்து கணேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் தூத்துக்குடி பிரையண்ட் நகர் 7வது தெருவைச் சேர்ந்த தனுஷ்கோடி மகன் கார்த்திக் (22) என்பவர் பைக்கை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவர் ஏற்கனவே 7 வழக்குகளில் தொடர்புடைய ரவுடி என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 


மக்கள் கருத்து

மக்கள்மே 18, 2022 - 11:47:16 AM | Posted IP 162.1*****

அந்த ரவுடி மூஞ்சி படத்தை வெளியிடுங்கள் பொதுமக்களுக்கு தெரியும்படியாக இருக்கும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory