» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கனிமொழி எம்பியுடன் திருமண்டல நிர்வாகிகள் சந்திப்பு
சனி 23, அக்டோபர் 2021 10:46:29 AM (IST)
தூத்துக்குடி நாசரேத் திருமண்டல "லே" செயலர் கிப்சன் மற்றும் திருமண்டல நிர்வாகிகள், கனிமொழி எம்பியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தில் கடந்த 20-10-2021 அன்று இறுதி கட்ட தேர்தல் நடைபெற்றது. இதில் "லே" செயலராக கிப்சன், திருமண்டல உப தலைவராக குருவானவர் தமிழ்ச்செல்வன், குருத்துவ காரியதரிசியாக இம்மானுவேல் வான்ஸ்டக், பொருளாளராக மோகன்ராஜ் அருமைநாயகம் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.வெற்றி பெற்ற புதிய நிர்வாகிகள் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் அவர்களையும், மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
மக்கள் கருத்து
PrassanaOct 23, 2021 - 11:31:34 AM | Posted IP 162.1*****
திமுக கட்சியினர் திருமண்டல தேர்தலில் தலையிடுவது அவர்களுடைய வெற்றிக்கு பின்னடைவை ஏற்படுத்தும்
JOSEPH KANAGARAJOct 25, 2021 - 09:35:41 AM | Posted IP 108.1*****