» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கல்லூரி மாணவி திடீர் மாயம்: போலீஸ் விசாரணை!!

புதன் 13, அக்டோபர் 2021 11:41:49 AM (IST)

புதூரில் கல்லூரி மாணவி ஒருவர் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், புதூர், ஸ்ரீராம் நகரைச் சேர்ந்தவர் தனம். இவரது மகள் அங்காள ஈஸ்வரி (19), அருப்புகோட்டையில் உள்ள கல்லூரியில் பிஎஸ்சி 3ஆம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த வெள்ளிக்கிழமை கல்லூரிக்குச செல்வதாக கூறிச்சென்றுள்ளார். அதன் பின்னர் வீடுதிரும்பவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் அவரைப்பற்றிய தகவல் தெரியவில்லை. இதுகுறித்து அவரது தந்தை புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜின்னா பீர் முகம்மது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory