» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கல்லூரி மாணவி திடீர் மாயம்: போலீஸ் விசாரணை!!
புதன் 13, அக்டோபர் 2021 11:41:49 AM (IST)
புதூரில் கல்லூரி மாணவி ஒருவர் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், புதூர், ஸ்ரீராம் நகரைச் சேர்ந்தவர் தனம். இவரது மகள் அங்காள ஈஸ்வரி (19), அருப்புகோட்டையில் உள்ள கல்லூரியில் பிஎஸ்சி 3ஆம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த வெள்ளிக்கிழமை கல்லூரிக்குச செல்வதாக கூறிச்சென்றுள்ளார். அதன் பின்னர் வீடுதிரும்பவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் அவரைப்பற்றிய தகவல் தெரியவில்லை. இதுகுறித்து அவரது தந்தை புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜின்னா பீர் முகம்மது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.