» செய்திகள் - விளையாட்டு » உலகம்

மாஜி. போலீஸ் அதிகாரி வெறியாட்டம்: துப்பாக்கிச் சூட்டில் 22 குழந்தைகள் உட்பட 34 பேர் பலி!

வியாழன் 6, அக்டோபர் 2022 5:24:08 PM (IST)



தாய்லாந்து நாட்டின் நோங் பூவா  லாம்பூ மாகாணத்தில் குழந்தைகள் மருத்துவமனையில் மாஜி. போலீஸ் அதிகாரி நடத்திய துப்பாக்கி சூட்டில் 22 சிறுவர்கள் உட்பட 34 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

துப்பாக்கிச்சூடு நடத்தியவர் 34 வயதான முன்னாள் போலீஸ் அதிகாரி என்றும், துப்பாக்கிச் சூடு நடத்தியதை தொடர்ந்து அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதில் மேலும் 12 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துப்பாக்கி சூடு நடத்திய நபர் போதைப்பொருள் வழக்கில் தொடர்புடைய காரணங்களுக்காக காவல்துறையில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இவர் மதிய உணவு நேரத்தில் துப்பாக்கி சூடு நடத்திய போது சுமார் 30 குழந்தைகள் மையத்தில் இருந்ததாக  அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும் எட்டு மாத கர்ப்பிணியான ஒரு ஆசிரியர் உட்பட நான்கு அல்லது ஐந்து ஊழியர்களை அவர் முதலில் சுட்டுக் கொன்றதாக மாவட்ட அதிகாரி கூறியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory