» செய்திகள் - விளையாட்டு » உலகம்
இந்தியாவிடமிருந்து 50ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி இறக்குமதி: இலங்கை அரசு முடிவு!
வெள்ளி 17, ஜூன் 2022 10:37:26 AM (IST)
இந்தியாவிடமிருந்து கடனுதவி திட்டத்தின்கீழ் 50,000 மெட்ரிக் டன் அரிசி இறக்குமதி செய்ய முடிவு செய்திருப்பதாக இலங்கை பிரதமா் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளாா்.
அரிசி பற்றாக்குறையைப் போக்கவும், விலைவாசி உயா்வைத் தவிா்க்கவும் இந்தியாவிடமிருந்து கடனுதவி திட்டத்தின்கீழ் 50,000 மெட்ரிக் டன் அரிசி இறக்குமதி செய்ய முடிவு செய்திருப்பதாக இலங்கை பிரதமா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரலில் ரசாயன உர பயன்பாட்டுக்கு அதிபா் கோத்தபய ராஜபட்ச தடை விதித்ததால், அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவு தானியங்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. அதற்கு முன்பாக அரிசி உற்பத்தியில் இலங்கை தன்னிறைவு பெற்றிருந்தது. இலங்கைக்கு 25 டன் மருந்து, 9,000 டன் அரிசி, 50 டன் பால் மாவு, 3,500 மெட்ரிக் டன் திரவ பெட்ரோலிய எரிவாயு (எல்பிஜி) உள்ளிட்ட பொருள்களை இந்தியா அண்மையில் அனுப்பிவைத்தது குறிப்பிடத்தக்கது.