» செய்திகள் - விளையாட்டு » உலகம்

வியட்நாம் விமானப்படை பயிற்சி பள்ளிக்கு 1 மில்லியன் டாலர் நிதியுதவி: ராஜ்நாத் சிங் வழங்கினார்.

வெள்ளி 10, ஜூன் 2022 11:41:59 AM (IST)



இந்தியாவின் சார்பில் வியட்நாம் விமானப்படை பயிற்சி பள்ளிக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவியை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வழங்கினார்.

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 3 நாள் அரசுமுறை பயணமாக வியட்நாம் சென்று உள்ளாா். அந்நாட்டு விமானப்படை பயிற்சி பள்ளியில் மொழி மற்றும் தகவல் தொழில்நுட்ப ஆய்வகத்தை நிறுவுவதற்காக 1 மில்லியன் அமொிக்க டாலருக்கான காசோலையை வழங்கினாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட டுவிட்டா் பதிவில், வியட்நாம் விமானப்படை அதிகாரிகள் பயிற்சி பள்ளியில் மொழி மற்றும் தகவல் தொழில்நுட்ப ஆய்வகத்தை நிறுவுவதற்காக 1 மில்லியன் அமொிக்க டாலருக்கான காசோலையை வழங்கினேன். வியட்நாம் வான் பாதுகாப்பு மற்றும் விமானப்படை பணியாளர்களுக்கு மொழி மற்றும் தகவல் தொழில்நுட்ப திறன்களை உயர்த்துவதற்கு ஆய்வகம் கணிசமாக பங்களிக்கும் என்று நான் நம்புகிறேன். என அவா் பதிவிட்டுள்ளாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory