» செய்திகள் - விளையாட்டு » உலகம்
வியட்நாம் விமானப்படை பயிற்சி பள்ளிக்கு 1 மில்லியன் டாலர் நிதியுதவி: ராஜ்நாத் சிங் வழங்கினார்.
வெள்ளி 10, ஜூன் 2022 11:41:59 AM (IST)
இந்தியாவின் சார்பில் வியட்நாம் விமானப்படை பயிற்சி பள்ளிக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவியை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வழங்கினார்.
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 3 நாள் அரசுமுறை பயணமாக வியட்நாம் சென்று உள்ளாா். அந்நாட்டு விமானப்படை பயிற்சி பள்ளியில் மொழி மற்றும் தகவல் தொழில்நுட்ப ஆய்வகத்தை நிறுவுவதற்காக 1 மில்லியன் அமொிக்க டாலருக்கான காசோலையை வழங்கினாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்ட டுவிட்டா் பதிவில், வியட்நாம் விமானப்படை அதிகாரிகள் பயிற்சி பள்ளியில் மொழி மற்றும் தகவல் தொழில்நுட்ப ஆய்வகத்தை நிறுவுவதற்காக 1 மில்லியன் அமொிக்க டாலருக்கான காசோலையை வழங்கினேன். வியட்நாம் வான் பாதுகாப்பு மற்றும் விமானப்படை பணியாளர்களுக்கு மொழி மற்றும் தகவல் தொழில்நுட்ப திறன்களை உயர்த்துவதற்கு ஆய்வகம் கணிசமாக பங்களிக்கும் என்று நான் நம்புகிறேன். என அவா் பதிவிட்டுள்ளாா்.