» செய்திகள் - விளையாட்டு » உலகம்
கரோனா தொற்று சரிவைச் சந்தித்து வந்தாலும், இன்னும் முடிவடையவில்லை: உலக சுகாதார அமைப்பு
வியாழன் 9, ஜூன் 2022 4:47:44 PM (IST)
உலகளவில் கரோனா தொற்று சரிவைச் சந்தித்து வந்தாலும், இன்னும் முடிவடையவில்லை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குனர் டெட்ராஸ் அதனம் கெப்ரிசியஸ் தெரிவித்தாவது: கடந்த ஜனவரியில் உச்சத்தைத் தொட்ட கரோனா தொற்று தற்போது சரிவைச் சந்தித்து வருகிறது. இது மிகவும் ஊக்கமளிக்கும் ஒரு போக்காகும். இருப்பினும், தொற்றுநோய் இன்னும் முடிவடையவில்லை.
பல நாடுகள் கரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளை கைவிட்டு கரோனாவுடன் வாழ முயற்சித்தாலும், எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இன்னும் 68 நாடுகளில் 40 சதவீத மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை. தொற்றுநோய் முடிந்துவிட்டது என்ற கருத்து புரிந்துகொள்ளத் தக்கது. ஆனால் தவறானது. உருமாறிய, ஆபத்தான வைரஸ் எந்த நேரத்திலும் வெளிப்படலாம். ஏராளமான மக்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.