» செய்திகள் - விளையாட்டு » உலகம்
இலங்கையில் அடுத்த 3 நாள்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் இல்லை!
சனி 4, ஜூன் 2022 10:50:31 AM (IST)

இலங்கையில் அடுத்த 3 நாள்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் இல்லை என எரிவாயு விநியோக நிறுவனம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு, உணவுத் தட்டுப்பாடு தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில், இலங்கையில் அடுத்த 3 நாள்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் இருக்காது என்று அந்த நாட்டு எரிபொருள் விநியோக நிறுவனமான 'லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட்' தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த செவ்வாய்கிழமை இலங்கைக்கு வந்த சிலிண்டர்கள் கடைசி இருப்பை நேற்று நிறுவனம் விநியோகித்துள்ளது. அதன்படி, ஜூன் 3 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மொத்தமாக 16,000 சிலிண்டர்கள் விற்கப்பட்டுள்ளன. இதையடுத்து சமையல் எரிவாயு சிலிண்டர்கள் நாளை ஞாயிறு அன்று இலங்கையை வந்தடையும், இதனால் சிலிண்டர் விநியோகம் வருகிற செவ்வாய்க்கிழமை தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாகவும் எரிவாயுவுக்காக பொதுமக்கள் வரிசையில் காத்திருக்க வேண்டாம் எனவும் அந்நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஐக்கிய அரபு அமீரகத்தில் கொட்டி தீர்க்கும் கனமழை: அனைகள் வேகமாக நிரம்புகிறது!
வெள்ளி 12, ஆகஸ்ட் 2022 5:24:22 PM (IST)

தாய்லாந்தில் தஞ்சமடைந்தார் கோத்தபய ராஜபக்சே!!
வெள்ளி 12, ஆகஸ்ட் 2022 12:11:43 PM (IST)

குரங்கு அம்மை நோய் பீதி: பிரேசிலில் விஷம் வைத்து கொல்லப்படும் குரங்குகள்..!!
வியாழன் 11, ஆகஸ்ட் 2022 11:05:39 AM (IST)

இலங்கை துறைமுகத்துக்கு நுழைந்த சீன உளவு கப்பல்: இந்தியாவை மிரட்டும் சீனா..!
வியாழன் 11, ஆகஸ்ட் 2022 11:01:02 AM (IST)

சிங்கப்பூரில் இருந்து வெளியேறும் கோத்தபய ராஜபக்சே: தாய்லாந்தில் தஞ்சமடைய திட்டம்!
புதன் 10, ஆகஸ்ட் 2022 3:41:53 PM (IST)

அமெரிக்க வராலற்றில் இருண்ட காலம்: எப்.பி.ஐ. சோதனைக்கு டிரம்ப் கடும் கண்டனம்!
செவ்வாய் 9, ஆகஸ்ட் 2022 11:36:47 AM (IST)

ஆம்Jun 4, 2022 - 04:41:39 PM | Posted IP 162.1*****