» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பிரேசில் அதிபர் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகள் பதிவு: பாராளுமன்ற குழு ஒப்புதல்

வியாழன் 28, அக்டோபர் 2021 4:50:36 PM (IST)

பிரேசில் நாட்டில் கரோனா தொற்றை கையாண்ட விதம் குறித்து அதிபர் ஜெய்ர் போல்சனரோ மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்ய அந்நாட்டின் பாராளுமன்ற குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.

உலக அளவில் கரோனா வைரசால் மிகவும் மேசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரேசிலும் ஒன்று. அங்கு கரோனா தொற்றால் 6 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பிரேசிலில்தான் கரோனா தொற்று உயிரிழப்புகள் அதிகம்.
 
அந்த நாட்டின் அதிபர் ஜெய்ர் போல்சனரோ கரோனா வைரசை தீவிரமாக எடுத்து கொள்ளமால் அலட்சியம் காட்டியதே தொற்று மற்றும் உயிரிழப்பு அதிகரிக்க காரணம் என்கிற குற்றசாட்டு உள்ளது. இது தொடர்பாக போல்சனரோவை பதவி விலகக்கோரி அங்கு பெரிய அளவில் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் அதிபர் ஜெய்ர் போல்சனரோ கரோனா தொற்றை கையாண்ட விதம் குறித்து அவர் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய அந்த நாட்டின் பாராளுமன்ற குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. பாராளுமன்ற குழுவின் 11 உறுப்பினர்களில் 7 பேர் போல்சனரோ மீது மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் 9 குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய பரிந்துரைக்கும் அறிக்கைக்கு ஆதரவாக வாக்களித்தனர். இந்த குழுவின் தலைவர் ஒமர் அசிஸ், இந்த பரிந்துரையை பிரேசிலின் அட்டார்னி ஜெனரலிடம் ஒப்படைக்கவுள்ளார்.

பாராளுமன்ற குழுவின் இந்த பரிந்துரையால் போல்சனரோ மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படுமா என்று உறுதியாகத் தெரியவில்லை. ஏனெனில் இந்த பரிந்துரையை ஆய்வு செய்யும் நபரை அதிபரே நியமிப்பார். அது நிச்சயம் அவருக்கு ஆதரவாகத்தான் அமையும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory