» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ஆப்கானில் சிறுமி, முன்னாள் அரசுப்படை வீரர்கள் உள்பட 13 பேரை கொலை செய்த தலீபான்கள்!
செவ்வாய் 5, அக்டோபர் 2021 12:19:55 PM (IST)
ஆப்கானில் சிறுமி, முன்னாள் அரசுப்படை வீரர்கள் உள்பட 13 பேரை தலீபான்கள் கொலை செய்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி ஆட்சியை கைப்பற்றிய தலீபான்கள் முந்தைய ஆட்சியில் தங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களை குறிவைத்து தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர். மேலும், தங்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் ஆயுதமேந்திய குழுக்களையும் தலீபான்கள் அழித்து வருகின்றன.
இந்நிலையில், அந்நாட்டின் ஹைதர் மாவட்டத்திற்குள் கடந்த 30-ம் தேதி நுழைந்த தலீபான்கள் முந்தைய ஆட்சியில் அரசுப்படையில் பணியாற்றிய ராணுவ வீரர்கள் 11 பேர் உள்பட 13 பேரை கொலை செய்தனர். இதில் 17 வயது சிறுமியும் அடக்கம் என அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு தெரிவித்துள்ளது.