» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் அளிப்பது பாகிஸ்தான் அரசின் கொள்கை: இந்தியா

சனி 25, செப்டம்பர் 2021 5:34:12 PM (IST)



பாகிஸ்தான் அண்டை நாடுகளுக்கு மட்டும் தீங்கு விளைவிக்கும் என்ற நம்பிக்கையில் பயங்கரவாதிகளை கொல்லைப்புறத்தில் வளர்க்கிறது என என இந்தியா தெரிவித்து உள்ளது.

நியூயார்க் நகரில் நடைபெறும் ஐ.நா.பொதுச்சபை 76வது கூட்டத்தில் உரை நிகழ்த்திய இந்திய முதன்மைச் செயலர் சினேகா தூபே இந்தியாவின் உரிமை என்ற அடிப்படையில் காஷ்மீர் குறித்த பாகிஸ்தானின் கருத்துகளுக்கு பதில் அளித்து கூறியதாவது: பாகிஸ்தானின் பிரதமர் உலக அரங்கில் பொய்யான விஷயங்களைத் தூண்டி, இந்த மோசமான மன்றத்தின் பெயரை கெடுக்க வேண்டும் என முயற்சிக்கிறார்.

ஜம்மு & காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்கள் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் எப்போதும் பிரிக்க முடியாத பகுதியாக இருக்கும்.பாகிஸ்தானின் சட்டவிரோத ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள அனைத்து பகுதிகளையும் உடனடியாக வெளியேறுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளித்து இந்தியா மீது தாக்குதல் நடத்தும் செயலில் பாகிஸ்தான் நீண்ட காலமாகவே ஈடுபட்டு வருகிறது. 

பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் அளிப்பதும் நிதியுதவி அளிப்பதும் பாகிஸ்தானின் கொள்கையாக இருப்பதை உலக நாடுகள் கவனத்தில் கொள்ள வேண்டும். பாகிஸ்தான் தங்கள் அண்டை நாடுகளுக்கு மட்டும் தீங்கு விளைவிக்கும் என்ற நம்பிக்கையில் பயங்கரவாதிகளை அவர்களின் கொல்லைப்புறத்தில் வளர்க்கிறது. இந்தியா மட்டுமல்ல உண்மையில் அவர்களின் கொள்கைகளால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. மறுபுறம், அவர்கள் தங்கள் நாட்டில் மதவெறி வன்முறையால் பயங்கரவாத செயல்களை மறைக்க முயற்சிக்கின்றனர் என கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory