» செய்திகள் - விளையாட்டு » உலகம்
தடுப்பூசி செலுத்திக் கொண்ட குழந்தைகளுக்கு மட்டுமே பள்ளிகளில அனுமதி : லாஸ் ஏஞ்சல்ஸ் நிர்வாகம்
வெள்ளி 10, செப்டம்பர் 2021 4:28:44 PM (IST)
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பள்ளி குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசிகள் கட்டாயம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
உலக அளவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. இதனை முன்னிட்டு அந்நாட்டு மக்களுக்கு தடுப்பூசி போடும் பணிகளை பைடன் தலைமையிலான அரசு தீவிரப்படுத்தி உள்ளது. இந்நிலையில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட வேண்டியது கட்டாயம் என்றும், அதன் பின்னரே அவர்கள் பள்ளிகளுக்கு செல்வதற்கான அனுமதியை பெறுவார்கள் என்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர கல்வி நிர்வாகம் அறிவித்துள்ளது.