» செய்திகள் - விளையாட்டு » உலகம்

எகிப்தில் ஹெராயின் கடத்தல்: பாகிஸ்தானைச் சேர்ந்த 7பேருக்கு மரண தண்டனை

செவ்வாய் 7, செப்டம்பர் 2021 4:43:51 PM (IST)

எகிப்தில் போதை பொருள் கடத்தல் வழக்கில் பாகிஸ்தானியர்கள் 7 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

எகிப்து நாட்டில் செங்கடல் வழியே 2 டன் எடை கொண்ட ஹெராயின் என்ற போதை பொருள் கடத்தல் கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்றது.  இதன் மதிப்பு 1,167 கோடி என மதிப்பிடப்பட்டு உள்ளது.  இதனை போலீசார் கைப்பற்றி உள்ளனர். இந்நிலையில், இதுபற்றிய விசாரணையில் எகிப்து கோர்ட்டு, வழக்கில் தொடர்புடைய பாகிஸ்தானியர்கள் 7 பேருக்கு மரண தண்டனை வழங்கியுள்ளது.  

இதேபோன்று 2 எகிப்தியர்கள் மற்றும் ஈரானியர் ஒருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. சந்தேகத்திற்குரிய வகையிலான அனைவரிடமும் போதை பொருள் பதுக்கி இருந்தது கண்டறியப்பட்டது.  அந்த நாட்டில் மரண தண்டனை வழங்கப்படுவது சட்டப்பூர்வ ஒன்றாக்கப்பட்டு உள்ளது. கடந்த 2016ம் ஆண்டில் 44 பேர், 2017ம் ஆண்டில் 35 பேர், 2018ம் ஆண்டில் 43 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory