» செய்திகள் - விளையாட்டு » உலகம்

சூப்பர் மார்க்கெட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய ஐ.எஸ். தீவிரவாதி போலீசார் துப்பாக்கி சூட்டில் பலி

வெள்ளி 3, செப்டம்பர் 2021 5:39:00 PM (IST)



நியூசிலாந்தில் சூப்பர் மார்க்கெட்டுக்குள் புகுந்து மர்ம நபர் நடத்திய தாக்குதலில் 6 பேர் காயம் அடைந்தனர், மர்ம மனிதர் போலீசாரால் சுட்டுக்கொல்லபட்டார்.

நியூசிலாந்தின் நார்த் ஐலேண்டு  மாகாணத்தில் உள்ள ஆக்லாந்து நகரில்  நியூலின் பகுதியில் சூப்பர் மார்க்கெட் ஒன்று உள்ளது. இந்த மார்க்கெடுக்குள் கத்தியுடன்  புகுந்த   ஒரு வாலிபர்  அங்கிருந்தவர்களை சரமாறியாக  கத்தியால் தாக்கினார். இதில் 6 பேர் காயம் அடைந்தனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் மர்ம நபர் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் அதே இடத்தில் அவர் பலியனார். காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கபட்டனர். தாக்குதல் நடத்தியவர் இலங்கையைச் சேர்ந்த நபர் ஐ.எஸ் அமைப்பால்  ஈர்க்கப்பட்டிருக்கலாம் என்ற போலீசார் சந்தேகம் தெரிவித்து உள்ளனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory