» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
தெலுங்கானாவில் சிறுமி உட்பட 6 பேர் கொலை வழக்கு: போக்சோ குற்றவாளி தற்கொலை!
செவ்வாய் 14, ஜூலை 2026 11:32:49 AM (IST)

தெலுங்கானாவில் தனது குடும்பத்தினர் மற்றும் சிறுமி உட்பட 6 பேரைக் கொலை செய்துவிட்டுத் தலைமறைவாக இருந்த போக்சோ குற்றவாளி ராஜ்குமார், காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.
தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள ஷபாத் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். போக்சோ சட்டத்தின் கீழ் கைதாகி சிறையிலிருந்த இவர், அண்மையில் ஜாமீனில் வெளியில் வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, ஜூலை 10 அன்று தனது மனைவி, இரு மகன்கள் மற்றும் தான் சிறைக்குச் செல்லக் காரணமாக இருந்த 17 வயதுச் சிறுமி உட்பட மொத்தம் 6 பேரை ராஜ்குமார் படுகொலை செய்துள்ளார்.
இக் கொலைச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவான ராஜ்குமாரைப் பிடிக்கத் தனிப்படைகள் அமைத்துத் தேடி வந்தனர்.இந்நிலையில், கொத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ராஜ்குமார் உயிரிழந்த நிலையில் கிடப்பதாகக் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர் அவரது உடலைக் கைப்பற்றினர்.
அப்போது அவரது உடலின் அருகே பூச்சிக்கொல்லி மருந்து பாட்டில் ஒன்று கண்டெடுக்கப்பட்டுப் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பேரைக் கொலை செய்த குற்ற உணர்வு அல்லது காவல்துறையினரிடம் சிக்குவதைத் தவிர்க்கும் நோக்கில் ராஜ்குமார் பூச்சிக்கொல்லி மருந்து அருந்தி தற்கொலை செய்திருக்கலாம் எனக் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். இச்சம்பவம் குறித்துக் கொத்தூர் காவல்துறையினர் மரண விசாரணை வழக்குப்பதிவு செய்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

யூபிஐ, ரூபே கார்டு பரிவர்த்தனைக் கட்டணம்: : மக்களவையில் மசோதா நிறைவேற்றம்!
சனி 8, ஆகஸ்ட் 2026 5:36:51 PM (IST)

நீட் வினாத்தாளை பேராசிரியர்களே விற்றனர்: சிபிஐ குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சித் தகவல்!
சனி 8, ஆகஸ்ட் 2026 12:10:37 PM (IST)

டீப்ஃபேக் மற்றும் போலி தகவல்களை நீக்க காலக்கெடு குறைப்பு : மத்திய அரசு அதிரடி!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 5:05:16 PM (IST)

நெசவாளர்களை ஆதரிக்கக் கைத்தறிப் பொருட்களை வாங்குங்கள்: பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 4:44:44 PM (IST)

கேஸ் சிலிண்டர் விலை ரூ.18 உயர்கிறது? - மத்திய அரசு ஆலோசனை!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 11:44:50 AM (IST)

நீதிபதிகளின் ஓய்வு வயது 60-லிருந்து 62-ஆக உயர்வு? உச்ச நீதிமன்றத்தில் வெளியான முக்கிய உத்தரவு!
வியாழன் 6, ஆகஸ்ட் 2026 4:36:28 PM (IST)


