» செய்திகள் » இந்தியா
நல்ல குடும்ப பெண்களும் விபச்சாரத்தில் ஈடுபடுகிறார்களே...! - உச்சநீதிமன்ற நீதிபதிகள் கவலை
சனி 28, ஜனவரி 2012 12:38:13 PM (IST)
பட்டதாரி பெண்களும், நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் பணத்திற்கும், ஆடம்பர வாழ்க்கைக்கும் ஆசைப்பட்டு விபச்சார தொழிலில் ஈடுபட்டு வருவதாக உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.
விபச்சார தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்களின் மறுவாழ்வுக்காக நடவடிக்கை எடுப்பது தொடர்பான வழக்கு, உச்சநீரிமன்றத்தில் நீதிபதிகள் அல்டமஸ் கபீர், கியான் சுதா மிஸ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கான மறுவாழ்வு நடவடிக்கைகளை ஆய்வு செய்ய மத்திய அரசால் அமைக்கப்பட்ட சிறப்பு குழுவைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் பிரதீப் கோஷ், ஜெயந்த் பூஷண் ஆகியோரைப் பார்த்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அப்போது நீதிபதிகள் கூறுகையில், இன்றைய தினம், நல்ல குடும்பத்தைச் சேர்ந்த, பல்கலைக்கழகத்தில் பயிலும் பெண்களும், பட்டதாரிகளும் கூட ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு விபச்சார தொழிலில் ஈடுபட்டு வருவதை காண்கிறோம். அவர்கள் தாங்களாக விருப்பப்பட்டு இந்த தொழிலில் ஈடுபடுகிறார்கள் என்றால், அவர்களின் மறுவாழ்வுக்கு மத்திய அரசு சார்பில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விபச்சார தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்களின் மறுவாழ்வுக்காக, நாம் எத்தனையோ கருத்தரங்குகள், மாநாடுகள் நடத்துகிறோம். ஆனால் அத்துடன் அந்த பிரச்சினையை முடித்துக்கொள்கிறோம். உறுதியான நடவடிக்கைகள் எடுப்பதில்லை. ஏதாவது நடவடிக்கை எடுப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். அது நமது மனசாட்சிக்கு திருப்தியாக அமைய வேண்டும். வெறும் கண்துடைப்பாக அமைந்துவிடக்கூடாது. எனவே, மத்திய, மாநில அரசுகள் எடுத்து வரும் மறுவாழ்வு நடவடிக்கைகளை உச்சநீதிமன்றம் தொடர்ந்து கண்காணித்து வரும், என்றனர்.
மேலும், வக்கீல்கள் பிரதீப் கோஷ், ஜெயந்த் பூஷண் ஆகியோரைக் கொண்ட சிறப்பு கமிட்டி செயல்பட சட்ட கமிஷன் அலுவலகத்தில் 3 வாரங்களுக்குள் இடம் ஒதுக்குமாறு கூடுதல் அட்டர்னி ஜெனரல் பி.பி.மல்கோத்ராவுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மக்கள் கருத்து
pasamசனி 28, ஜனவரி 2012 - 04:33:30 PM | Posted IP 117.2*****
அய்யா நீதி அரசர்களே அது என்ன நல்ல குடும்பம் கெட்ட குடும்பம் ? எல்லாம் சூழ்நிலை கைதிகள் தான் அய்யா ! யாரும் பெண்கள் விரும்பி போவதில்லை ஆணாதிக்க சமூகத்தின் வெறிக்கு இரை அவ்வளவுதான் . மனசாட்சியை அடகு வைத்து விட்ட தேசத்திற்கு ஏழைகளை பற்றி என்ன கவலை வர போகுது சாமிங்களா
மேலும் தொடரும் செய்திகள்

மீனவர்கள் கொன்ற இத்தாலி வீரர்களை விசாரிக்க தனிப்படை: கப்பலில் சோதனையிட உத்தரவு!!
புதன் 22, பிப்ரவரி 2012 5:29:07 PM (IST)

வடஇந்தியர்களுக்கு எதிராக பேசியதாக ராஜ்தாக்கரே மீதான வழக்கு ரத்து: மும்பை ஐகோர்ட் உத்தரவு!!
புதன் 22, பிப்ரவரி 2012 5:18:47 PM (IST)

நிதி நெருக்கடியில் சிக்கிய கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு எஸ்பிஐ ரூ.1650 கோடி கடன்!!
புதன் 22, பிப்ரவரி 2012 3:14:47 PM (IST)

ஹோம்ஒர்க் செய்யாததால் யு.கே.ஜி மாணவனை கழிப்பறையில் அடைத்த ஆசிரியர்!!
புதன் 22, பிப்ரவரி 2012 10:33:55 AM (IST)
பழங்குடியின பெண்களை நிர்வாண நடனமாடச் செய்து வீடியோ பதிவு: போலீஸ் ஏட்டு கைது
புதன் 22, பிப்ரவரி 2012 10:23:20 AM (IST)

தேசிய அளவில் ஒரே பொது நுழைவு தேர்வு : மாநிலகல்வி அமைச்சர்களின் ஆலோசனை கூட்டம்
செவ்வாய் 21, பிப்ரவரி 2012 4:17:03 PM (IST)



ஆர்த்திதிங்கள் 30, ஜனவரி 2012 - 09:32:14 AM | Posted IP 117.2*****